Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம் அந்த சென்னை ரயில் தான்.. வேகமும் நேரமும் அடியோடு மாறுது.. தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் - கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மாற்றப்படுவதால் பயண நேரம் கணிசமாக குறையப்போகிறது.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில்களில் மிக முக்கியமானது அனந்தபுரி விரைவு ரயில், இந்த ரயில் தமிழகத்தின் சென்னை தொடங்கி, கடைக்கோடியான நாகர்கோவில் வரை செல்கிறது. அங்கிருந்து கேரளாவில் நுழைந்து கொல்லத்திற்கு செல்கிறது. இந்த ரயிலில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும்.

Speed of Chennai Egmore - Kollam Ananthapuri Express has been increased: good news for south district

அனந்தபுரி விரைவு ரயில் திருநெல்வேலி, நாகர்கோவில், கேரளாவில் கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியமான ரயிலாக உள்ளது. இந்த ரயிலில் இரவில் பயணித்தால் காலையில் நாகர்கோவில் செல்ல முடியும். தென்மாவட்டத்தினர் தினமும் கேரளா செல்லவும், கேரளாவைச் சேர்ந்தவர்கள் தமிழகம் வரவும் இணைப்பு பாலமாக அனந்தபுரி உள்ளது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் - கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரிதது, அதனை அதிவிரைவு ரயிலாக மாற்றி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அனந்தபுரி ரயிலின் நேர அட்டவணையும் மாறி உள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனந்தபுரி ரயில் எப்படி இயங்கும் என்பது குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.

இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16823/16824) வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும் மற்றும் வண்டி எண்களும் மாற்றப்படுகிறது. இந்த ரயில் (20635) எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 20 நிமிடத்துக்கு முன்னதாக இரவு 7.50 மணிக்கும் புறப்படும்.

Speed of Chennai Egmore - Kollam Ananthapuri Express has been increased: good news for south district

தாம்பரத்துக்கு 8.18 மணிக்கும், செங்கல்பட்டுக்கு 8.48 மணிக்கும், விழுப்புரத்துக்கு 10.28 மணிக்கும், திருச்சிக்கு நள்ளிரவு 1.05 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு அதிகாலை 2.17 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 3.20 மணிக்கும், விருதுநகருக்கு அதிகாலை 4.10 மணிக்கும், திருநெல்வேலிக்கு காலை 6.05 மணிக்கும், நாகர்கோவிலுக்கு 7.40 மணிக்கும், கொல்லத்துக்கு காலை 11.15 மணிக்கும் சென்றடையும்.

அதே ரயில் மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து (20636) மதியம் 3.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் முன்னதாக மதியம் 2.50 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி இயக்கப்படும், இந்த ரயில் அடுத்தநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+