உனக்கு ஆங்கிலம் வராது என்பதால்.. நான் இந்தி பேச வேண்டுமா? சாந்தமாக பேசும் சுகி.சிவமே கொதிச்சிட்டாரே
சென்னை: உனக்கு ஆங்கிலம் அந்நிய மொழி என்கிறாய். எனக்கு இந்தியும் அந்நிய மொழிதான். எனக்கு அது என்ன சித்தி மொழியா? நீ ஏன் ஆங்கிலம் கற்கவில்லை. உனக்கு வரவில்லை. உனக்கு பேச முடியவில்லை. அதற்காக நான் இந்தி பேச வேண்டுமா? என்று ஆன்மீக பேச்சாளர் சுகி. சிவம் இந்தி திணிப்பிற்கு எதிராக பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. மும்மொழி கொள்கையை கொண்டு வர இந்த திட்டம் துடிப்பதால் இதற்கு எதிரியாக கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செய்ய நினைத்தால் விட மாட்டோம். மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போட மாட்டோம், என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் வைத்துள்ளார்.
சுகி. சிவம் விமர்சனம்
இந்த நிலையில் இந்தி திணிப்பிற்கு எதிராக பேசிய ஆன்மீக பேச்சாளர் சுகி. சிவம், இப்போது சிலர் தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பித்து இருக்கிறார்கள். நாங்கள் இந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களை தடுத்துவிட்டனர். நாங்கள் இந்தி கற்றுக்கொண்டால் பெரிதாக சாதித்து இருப்போம். இதை செய்திருப்போம்.. அதை செய்திருப்போம்.. வானத்தில் போய் கொடி ஏற்றி இருப்போம்.. எங்களை ஏமாற்றி விட்டார்கள்.. எங்களின் 2 தலைமுறை பாதிக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள்.
ஏன் வடக்கில் உள்ளவர்கள் ஆங்கிலம் படிக்கவில்லை. தாய் மொழியை படியுங்கள்.. ஆங்கிலம் படியுங்கள். எல்லாரும் இதை படிக்கட்டும். நீ தாய் மொழியில் படித்துவிட்டு மேலே வருவாய்.. உனக்கு அது எளிது.. நான் உன் தாய் மொழியை கற்றுக்கொண்டு மேலே வர வேண்டுமா? நீ மட்டும் இரண்டு மொழி படிப்பாய்.. நான் 3 மொழி படிக்க வேண்டுமா?
உனக்கு ஆங்கிலம் அந்நிய மொழி என்கிறாய். எனக்கு இந்தியும் அந்நிய மொழிதான். எனக்கு அது என்ன சித்தி மொழியா? நாங்கள் இந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் இந்தி கற்றுக்கொண்டால் பெரிதாக சாதித்து இருப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள். நீ ஏன் ஆங்கிலம் கற்கவில்லை. உனக்கு வரவில்லை. உனக்கு பேச முடியவில்லை. அதற்காக நான் இந்தி பேச வேண்டுமா? எனக்கு படிக்க வேண்டும் என்றால் எந்த மொழி வேண்டுமானாலும் நான் படிப்பேன்.
எனக்கு கட்டாயம் ஆக்காதே.. உனக்கு ஆங்கிலம் வரவில்லை. வடக்கே அவர்கள் பேசுவதை கேளுங்கள். ஆங்கிலம் அவர்களால் பேச முடியாது. அதற்காக நான் இந்தி கற்றுக்கொண்டு பேச வேண்டுமா? என்று சுகி. சிவம் இந்தி திணிப்பிற்கு எதிராக பேசி உள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications