Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் மத்திய அரசு பணியில் சேர சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் 2049 காலியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ப்பிக்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள மத்திய அரசு பணிகளில் சேர இந்தவாய்பை பயன்படுத்தலாம்.. விண்ணப்பிக்க மார்ச் 18ம் தேதி கடைசி நாள் ஆகும்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி, 2024ம் ஆண்டுக்கான 12ம் கட்ட ஆட்சேர்ப்பில், 2049 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை கடந்த பிப்ரவரி 26 அன்று வெளியிட்டது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் , 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் பல்வேறு தேர்வு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

SSC Recruitment 2024 : 10th, 12th and Degree candidates can apply central government jobs

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்க தேவையான தகுதி அறிந்து கொண்டு, ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டும் மார்ச் 18, 2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதத்தை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மார்ச் 22 அன்று முதல் மார்ச் 24 விண்ணப்பங்களில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள முடியும் . SSC தேர்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மே 6 முதல் 8 வரை இருக்கிறது.

எஸ்எஸ்சி மொத்தம் 2049 காலியிடங்களை அறிவித்துள்ளது, பொதுபிரிவினருக்கு 1028 காலியிடங்கள், ஓபிசிக்கு 456, எஸ்சிக்கு 255, எஸ்டிக்கு 124 மற்றும் EWS க்கு 186 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த காலியிடங்கள் வெவ்வேறு பதவிகள் மற்றும் படி நிலைகளை பொறுத்து வேறுபடும். குறிப்பிட்ட பதவியின் அடிப்படையில் சம்பளமும் மாறுபடும் அடிப்படை சம்பளம் ரூ. 5200 - ரூ. 34800 என்கிற அளவில் இருக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பதவியைப் பொறுத்து சம்பளம் பல ஆயிரங்களில் இருக்கும்.. அதாவது 7வது ஊதிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

SSC ஆட்சேர்ப்பு 2024: மொத்தம் 2049 காலி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது தேர்வு செயல்முறைக்கான விவரங்கள் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. விண்ணப்பக் கட்டணமாக 100 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி 26.02.24 அன்று தொடங்கியது. மார்ச் 18 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் கடந்த 26-ந் தேதி வெளியிட்டுள்ளது.பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் http://ssc.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 18-ந் தேதி ஆகும். மறுநாள் (19-ந் தேதி) இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி. தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும். தமிழ்நாட்டில் 8 மையங்களில் தேர்வு நடக்கிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+