நீட் தேர்வு இருக்கக் கூடாது! மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் அதிரடி! ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
சென்னை: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை இன்று முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழு மாநில அரசுக்கான கல்விக் கொள்கைகளை வடிவமைக்க கருத்துகள் கேட்பதோடு, பரிந்துரைகளை வழங்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த குழுவினர் தற்போது அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. இவை எல்லாம் பொதுமக்கள், மாணவர்கள், கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு மாநிலக் கொள்கை உருவாக்கப்பட்டது.
தமிழில் 600 பக்கங்களும் ஆங்கிலத்தில் 500 பக்கங்களையும் கொண்ட அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் சிறப்பம்சங்கள்:
நீட் தேர்வு இருக்கக் கூடாது
இரு மொழி கொள்கையே தொடர வேண்டும்
கல்லூரிகளில் சேர 12 ஆம் வகுப்பு மட்டுமின்றி 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்
3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications