Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து புதிய பாடப் புத்தகங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவியருக்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு. புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

State Goverment Allowing to Tamil Nadu Textbook Corporation raise the price of new textbooks

இந்த பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டில் 1, 3, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன.

இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்காக 2, 4, 5, 7, 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டுள்ள இந்த பாடப் புத்தகங்கள் 80 ஜிஎஸ்எம் தாளில் அச்சிடப்பட்டுள்ளன.

இதன்படி 40-52 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.30 விலையும், 56-72 பக்கம் கொண்டு புத்தகத்துக்கு ரூ.40 விலையும், 76-92 பக்கம் கொண்ட புத்தகம் ரூ.50 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

96-116 பக்கம் கொண்ட புத்தகத்தின் விலை ரூ.60, 120-136 பக்கம் கொண்டு புத்தக விலை ரூ.70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 352 முதல் 368 பக்கங்கள் கொண்ட ஒரு பாடப் புத்தகத்தின் விலை ரூ.180 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+