ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்!
சென்னை: காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் 2 அமைச்சர் பதவி, ஒரு ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார். இதனையடுத்து தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி சீட் ஒதுக்கப்படுவதாக விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 2 ராஜ்யசபா எம்பிக்களை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஒரு எம்பி சீட்டை காங்கிரஸ் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்யசபா இடைத்தேர்தல்
அதிமுகவிலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வாகியிருந்த சி.வி.சண்முகம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்பதால், அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து இந்த பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நாள்: ஜூன் 18
வேட்புமனு தாக்கல்: ஜூன் 1 - ஜூன் 8 வரை
2 அமைச்சர்+1 எம்பி
தற்போதைய சூழலில் தவெக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், தவெக யாரை நிறுத்தினாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். இப்படி இருக்கையில், தவெக ஆட்சி அமைக்கும் நேரத்தில் காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன் வந்ததால், அக்கட்சிக்கு 2 அமைச்சர் பதவி மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படும் என்று விஜய் வாக்கு கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று காலை காங்கிரஸ் நிர்வாகி கிரிஸ் சோடங்கர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்த தற்போது ஒரு ராஜ்யசபா சீட் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கானத் தேர்தல்: கூட்டணிக் கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு! இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications