நானும் தாய்லாண்டில்தான்... சட்டென போனில் மடக்கிய கருணாநிதி.. சு. திருநாவுக்கரசர் சொன்ன சுவாரசியம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முத்திரை பதிக்காத துறையே இல்லை; தமிழில் ஆழ்ந்த புலமை; சமயோசிதமாக பேசும் திறன் கொண்டவர் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான லோக்சபா எம்.பி. சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே. ரவீந்தரன் ஏற்பாட்டில் கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சி இணையவழியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் பேசியதாவது:
இந்திய அளவில் கருணாநிதிக்கு சமமாக எந்த ஒரு தலைவரும் இல்லை. அனைத்து துறைகளிலுமே புகழ் கொடி நாட்டியவர். கருணாநிதி துலஙாத துறை என்று எதுவுமே இருந்ததும் இல்லை.

தோல்வியை சந்திக்காதவர்
தமிழக சட்டசபையில் 60 ஆண்டுகாலம் பணியாற்றியவர். எம்.எல்.ஏவாக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, முதல்வராக பணிபுரிந்தவர். தேர்தல் வரலாற்றில் ஒருபோதும் தோல்வியையே தழுவாதவர் கருணாநிதி. மனம் திறந்து பாராட்டுவதில் கருணாநிதி வல்லவர். இதில் கஞ்சத்தனமே இல்லாதவர்.

கட்டுப்பாடுகளில் உறுதி
சமயோஜித அறிவு, பிரசென்ஸ்ப் ஆப் சென்ஸ், நினைவாற்றல், நேரந்தவறாமை ஆகியவற்றில் உறுதியாக இருந்தார். வயதான காலத்திலும் கூட நேரந்தவறாமையை கடைபிடித்தார். நான் தாமதமான போனால், நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆள்; தாமதமாகத்தான் வருவீர்கள் என கிண்டலடிப்பார்.

தாய்லாண்ட் விவகாரம்
ஒருமுறை வெளிநாட்டில் இருந்தேன். அப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நான் வெளிநாட்டில் இருப்பது தெரிந்தும், எங்கய்யா இருக்கிற என்றார். நான் தாய்லாந்தில் இருக்கிறேன் என்றேன். உடனே நானும் தாய்லாண்டில் (தாய்நாடு)தான் இருக்கிறேன் என கமெண்ட் அடித்தார்.

நம்பிக்கை வைத்த கருணாநிதி
ஒரு மேடையில் 100 பேர் பேசினாலும் 50 பேர் கவிதை வாசித்தாலும் அதில் முதன்மையானவராக. பேசுபொருளாக இருப்பவர் கருணாநிதி மட்டும்தான். சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தும் பார்த்திருக்கிறேன்; எம்ஜிஆர் காலத்திலும் பார்த்திருக்கிறேன்; ஜெயலலிதா காலத்திலும் பார்த்திருக்கிறேன் தனிக்கட்சி தொடங்கி கூட்டணியும் வைத்தேன். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 3-ஐ என் கட்சிக்கு நம்பிக்கையோடு கொடுத்தார் கருணாநிதி.

ஆறுதல் சொன்ன கருணாநிதி
இறுதி கால கட்டங்களில் அவரால் பேச்சே வரமுடியாத நிலையில் சந்தித்தேன். என்னை கட்டுப்படுத்த முடியாதல் அழுதேன். ஆனால் என் கைகளை தடவிக் கொடுத்து என்னைத்தான் அவர் ஆசுவாசப்படுத்தினார். அவரை ஜெயலலிதா அம்மையார் நள்ளிரவில் கைது செய்ததை தாங்கவே முடியாது. அப்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை போய் பார்த்தோம். ஏதோ தமது வீட்டில் அமர்ந்திருப்பது போல இறுக்கமே இல்லாமல் இயல்பாகவே இருந்தார். இவ்வாறு சு. திருநாவுக்கரசர் பேசினார்.
-
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications