மோடி சென்னையில் சொன்னாரே.. அதெல்லாம் சும்மா! ரயில் நிதியில் தமிழ்நாட்டுக்கு அநீதி - சு.வெங்கடேசன்
சென்னை: தமிழ்நாட்டில் ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு தங்கள் ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கும் நிலையில், பிரதமரின் இந்த கூற்றுக்கும் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாகவும், வடக்கு ரயில்வேயுடன் ஒப்பிடும் போது தெற்கு இரயில்வேயின் பல திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்றும் மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை துவக்கிவைக்கும் விழாவில் பங்கெடுத்து உரையாற்றிய பிரதமர் தமிழகத்தில் ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு தங்கள் ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார். இந்தாண்டு 6000 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் 2014 க்கு பிறகு அதிக தொகை ஒதுக்கப்பட்டு வருவதாக கூறினார். பிரதமரின் இந்த கூற்றுக்கும், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையின் பிங்க் புத்தகத்திற்கும் இடையில் நிறைய்ய வேறுபாடு உண்டு.

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்கள்: தமிழகத்தில் கடைசியாக வந்த ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்தோடு மொத்தம் ஒன்பது திட்டங்கள் புதிய பாதை திட்டங்கள் ஆகும். இந்த ஒன்பது திட்டங்களுக்கு தேவைப்படுகிற நிதி 11,400 கோடியாகும். இந்த திட்டங்கள் 2006-07 முதல் தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றுக்கு 2020 வரை வெறும் 211 கோடி தான் ஒதுக்கப்பட்டது.
2021- 22 முதல் சென்ற ஆண்டு வரை ஒவ்வொரு திட்டத்திற்கும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியதை சுட்டிக்காட்டி நான் விமர்சித்து இருக்கிறேன். ரயில்வே வாரிய தலைவரையும் சந்தித்து இருக்கிறேன். 2023 - 24 மட்டும் இந்த திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் துவக்கி வைத்த ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்திற்கு 385 கோடியும் திண்டிவனம் - நகரி திட்டத்திற்கு 200 கோடியும் தவிர மற்ற திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
யானை பசிக்கு சோளப்பொறி: 2006 இல் இருந்து 16 ஆண்டுகளில் இவர்கள் ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகளிலும் இதுவரை செலவு செய்யப்பட்ட தொகை 11,400 கோடிக்கு வெறும் 211 கோடி தான். இந்த ஆண்டு ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் இது யானை பசிக்கு சோளப்பொறி தான். இதே போல இரட்டைப்பாதை திட்டங்களுக்கு 5340 கோடி தேவைப்படுகிறது.

காட்பாடி - விழுப்புரம்; சேலம் - கரூர் - திண்டுக்கல்; ஈரோடு - கரூர் ஆகிய இரட்டை பாதை திட்டங்களுக்கு தேவைப்படுகிற நிதி மட்டும் 3851 கோடி. சென்ற ஆண்டு ஒதுக்கியது ஒவ்வொரு திட்டத்துக்கும் வெறும் ஆயிரம் கோடி. இந்த ஆண்டு 3 திட்டத்துக்கும் சேர்த்து வெறும் 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அகலப்பாதை திட்டத்தின் தொடர்ச்சியாக சின்னசேலம்- கள்ளக்குறிச்சி; காரைக்கால் பேரளம்; தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்கள் போதிய நிதியின்றி தவிக்கின்றன.
அநீதி இழைக்கப்படுகிறது: மதுரை மணியாச்சி- தூத்துக்குடி இரட்டை பாதை திட்டம் ஓரளவுக்கு முடியும் நிலையில் இருந்தாலும் வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் திட்டமும் அதே போல கன்னியாகுமரி - நாகர்கோவில்- திருவனந்தபுரம் திட்டமும் சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அதாவது 21 -22 முடியும் என்றார்கள். இன்னமும் அது இழுத்துக் கொண்டுதான் உள்ளது. 2023-24 தெற்கு ரயில்வேக்கே 8,322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 6000 கோடி தமிழகத்துக்கு. இந்த ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது.
ஆனால் 2014-15 இல் இருந்து 2022- 23 வரை சராசரியாக ஆண்டுதோறும் 2900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சி காலத்தின் அதே சராசரி தான் பிஜேபி ஆட்சிக்காலத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 16 ஆண்டுகளாக முடியாத புதிய ரயில் திட்டங்களை முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. வடக்கு ரயில்வேயுடன் ஒப்பிடும் போது தெற்கு இரயில்வேயின் பல திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை மறைக்க முடியாது. இனியும் பாரபட்சம் கலைந்து தெற்கு இரயில்வேக்கு தொடர்ந்து போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications