குறுக்கே பாய்ந்த சு.வெங்கடேசன்.. உடனே இன்று வெளியான அறிவிப்பை கவனிச்சீங்களா? முதல்வருக்கு நன்றி!
சென்னை: தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட் நேற்று வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் நேற்று நாளிதழ்களில் வெளியான அறிவிப்பு ஒன்றில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு கௌரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கல்வி தகுதியாக தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது இந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாளிதழ்களில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் பணி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு நிர்வாக காரணங்களாக மீளப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 22, 2023
திரைப்பட பயிற்சி நிறுவனத்தின்
பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் வேலைவாய்ப்பு குறித்து நேற்று வெளியிடப்பட்ட விளம்பரம் மீளப்பெறுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி.@CMOTamilnadu https://t.co/39pzDi6p8v pic.twitter.com/JxtyyK1c6k
இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் வேலைவாய்ப்பு குறித்து நேற்று வெளியிடப்பட்ட விளம்பரம் மீளப்பெறுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications