சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப வீரபாண்டியன் தேர்வு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகத்திற்கு வழங்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதும், அம்பேத்கர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடப்பு ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகத்திற்கு வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களுக்கு விருது தொகையாக ரூ.5 லட்சமும், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இந்த விருதுகளை நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்குகிறார்.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு தேர்வாகியுள்ள சுப வீரபாண்டியன் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவராக உள்ளார். இதேபோல் அம்பேத்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம் வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்று தந்ததில் பெரும் பங்காற்றியவர்.












Click it and Unblock the Notifications