ரகுமான் கான் மகன் சுபேர் கானுக்கு திமுகவில் முக்கியப் பதவி! ஸ்டாலின் செலக்ட் செய்த பின்னணி!
சென்னை: மறைந்த திமுகவின் மூத்த முன்னோடி ரகுமான் கானின் மகன் சுபேர் கானுக்கு திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் என்ற மாநில அளவிலான முக்கிய பதவியை வழங்கியுள்ளார் ஸ்டாலின்.
டாக்டர் மஸ்தானின் மறைவுக்கு பிறகு திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் பதவியிடம் காலியாக இருந்து வந்தது.

இந்த இடத்தை பிடிக்க திமுகவில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்கள் பலரும் போட்டி போட்டனர். இந்நிலையில் டாக்டர் சுபேர் கான் இந்த ரேஸில் வெற்றிபெற்றிருக்கிறார்.
திமுக மருத்துவ அணியின் மாநில இணைச் செயலாளராக உள்ள சுபேர் கான், பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி ஆக்டிவாக இயங்கி வருவதன் மூலம் தலைமையின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய வட்டத்தில் சுபேர் கான் இடம் பிடித்திருக்கிறார். அதேபோல் ரகுமான் கானின் நண்பரான துரைமுருகனின் ஆசியும் சுபேர் கானுக்கு உண்டு.
மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக சுபேர் கான் சென்னையில் பிரபலமான ஆர்த்தோ மருத்துவரும் கூட. படித்தவர், பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவர், மருத்துவர், ஓடி ஆடி உழைக்க வயதில் இளையவர், என பல காரணங்களின் அடிப்படையில் சுபேர் கானை திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக ஸ்டாலின் செலக்ட் செய்திருக்கிறார்.

மறைந்த ரகுமான் கானை பெருமைப்படுத்தும் விதமாகவும், கவுரவப்படுத்தும் வகையிலும் அவரது மகனுக்கு முக்கியப் பதவி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications