அரிசி கார்டு வைத்திருந்தால் ரூ.1000.. சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்ற இன்றே கடைசி நாள்
சென்னை : தமிழகத்தில் சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாளாகும். www.tnpds.gov.in என்ற இணையதள முகவரி வழியாக செல்போன் மூலமே இருந்த இடத்தில் இருந்தபடி எளிதாக மாற்றலாம்.
தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. பொருளில்லா அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை என மூன்றுவிதமான கார்டுகள் உள்ளன.
இதில் பெரும்பாலான மக்கள் அரிசி அட்டையாக வைத்துள்ளார்கள். இன்னும் சிலரது கார்டுகள் சர்க்கரை அட்டையாகவே உள்ளது. சிலர் வெளியூரிலோ அல்லது வெளிமாநிலத்திலோ சில காலம் வசிக்க நேர்ந்தாலோ அல்லது பொருள்கள் வாங்க விரும்பவில்லை என்றாலோ அவர்கள் தங்கள் அட்டையை பொருள் இல்லா அட்டையாக மாற்றி வைத்திருப்பார்கள்.

கோரிக்கை
இந்நிலையில் சர்க்கரை அட்டை வைத்துள்ள பலர் தங்கள் குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று தமிழக அரசு சர்க்கரை அட்டை வைத்துள்ளவர் அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என 26ம் தேதி வரை காலக்கெடு விதித்து.

இன்றே கடைசி
அதன்பிறகும் மாற்றாத மக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் மூன்று நாட்களுக்கு அதாவது 29ம் தேதி வரை (இன்று வரை0 காலஅவகாசத்தை நீட்டி தமிழக அரசு உத்தரவிட்டது. எனவே இன்றுடன்(வெள்ளிக்கிழமை) சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் முடிகிறது.

நேரடியாக வழங்கலாம்
தமிழ்நாட்டில் தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் இருந்தன. இவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அரிசி கார்டாக மாற்றக்கோரி விண்ணப்பங்களை இன்றைக்கள் நேரடியாக வழங்கலாம் என்று அரசு அறிவித்துஇருந்தது.

குடும்ப அட்டை
இதேபோல் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர்களிடமும், குடும்ப அட்டை நகலை இணைத்து விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து இருந்தது.

இன்றுடன் கடைசி
அதன்படி, www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் உங்கள் செல்போன் மூலமும் சர்க்கரை கார்டை அரிசி கார்டாக எளிதாக மாற்ற முடியும் எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்.

மக்கள் ஆர்வம்
இந்த ஆண்டு அரிசி கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். எனவே, சர்க்கரை கார்டு வைத்துள்ள பலர் அரிசி கார்டாக மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications