தாமதம்தான்.. ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சியே- முருகனின் மனைவி சுஜா
சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் கணவருக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சியே என பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா தெரிவித்தார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தியது. மேலும் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு நிர்மலா தேவி உள்பட 3 பேரும் பலமுறை கிளை நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து முருகனின் மனைவி கூறுகையில் ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நீதித்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
சிறையில் இருக்கும் போது தனது கணவரின் உயிருக்கு ஆபத்து என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் சுஜா.












Click it and Unblock the Notifications