சுஜித் எப்படி இருக்கான்? நிலை என்ன? துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு போன் செய்த லதா ரஜினிகாந்த்!
ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமிடம் லதா ரஜினிகாந்த் போன் செய்து விசாரித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமிடம் லதா ரஜினிகாந்த் போன் செய்து விசாரித்து இருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இவரை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இரண்டு ரிக் இயந்திரம் கொண்டு ஆழமாக சுரங்கம் தோண்டி, சுஜித்தை மீட்க ஓஎன்ஜிசி முயன்று வருகிறது. சுஜித்தை மீட்க வேண்டும் என்று தற்போது தமிழகம் மொத்தமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. 69 மணி நேரத்தை தாண்டி மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மீட்பு பணிகள் நடக்கும் பகுதிக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் இருக்கிறார்கள். அதேபோல் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அங்குதான் இரண்டு நாட்களாக இருக்கிறார். மேலும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவில் இருந்து மீட்பு பணி நடக்கும் பகுதியில் இருக்கிறார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு, சில மணி நேரங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் போன் செய்து பேசி இருக்கிறார்.
என்ன நடக்குமோ? 100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் ஒரு சிக்கல் இருக்கு.. விளக்கும் அதிகாரிகள்!
சிறுவன் சுஜித் எப்படி இருக்கிறான்? மீட்பு பணிகள் எப்படி சென்று கொண்டு இருக்கிறது என்று போன் செய்து விசாரித்து இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் சுஜித் நிலை குறித்து தெரிந்து கொள்ள குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
நேற்று நடிகர் ரஜினிகாந்த் சுஜித் மீட்பு பணிகள் நன்றாக நடக்கிறது. அரசையும் அதிகாரிகளையும் குறைய சொல்ல மாட்டேன். சுஜித் மீண்டு வர பிரார்த்திக்கிறேன், என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.