Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோசம் செய்யுமா மோச்சா? அதைவிடுங்க.. 4 நாட்களில் வானில் நடக்கும் அதிசயம் இதுதான்.. ஆய்வு மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்திருந்தது. இந்நிலையில் மழை முடிந்துவிட்டது எனவும் இனி வெளியில் அதிக அளவில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயில் கடுமையாக வீசிக்கொண்டிருந்தது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் என்கிற அளவை தாண்டி பதிவாகியிருந்தது. அக்னி வெயில் தொடங்காததற்கு முன்னரே இவ்வளவு வெயில் வாட்டி எடுத்ததே அக்னி தொடங்கினால் வெயில் எப்படி இருக்கும் என்று பலருக்கும் அச்சம் ஏற்பட்டது. ஆனால் அக்னி வெயில் தொடங்கியபோது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது.

Summer Heat: The Meteorological Department has warned that the heat will gradually increase in Tamil Nadu in the next 4 days

இன்னும் சொல்லப்போனால் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் மக்கள் ஒரளவு ஆசுவாசமடைந்தனர். பல இடங்களில் நீர் நிலைகள் நிரம்பின. இப்படி இருக்கையில் நேற்று முன்தினம் தொடங்கி வெயில் மீண்டும் பழைய மாதிரி வெளுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெளியில் அடுத்த நான்கு நாட்களில் 2-4 டிகிரி வரை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது,

"தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் தென்மேற்கே) நிலைகொண்டுள்ளது. இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அதே பகுதியில் புயலாக வலுபெறக்கூடும்.

மேலும் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை (11.05.2023) காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, நகர்ந்து 13.05.2023 முதல் சற்றே வலுக்குறைந்து 14.05.2023 காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Summer Heat: The Meteorological Department has warned that the heat will gradually increase in Tamil Nadu in the next 4 days

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்த அளவில் இன்று (மே 10) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதேபோல நாளை முதல் அதாவது மே 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் லேசான மழை இருக்கும். ஆனால் மே 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக 2-4 டிகிரி அதிகரிக்கும். குறிப்பாக 3-4ம் தேதி வரை 3-4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+