குட்நியூஸ் சொன்ன தமிழக மின்சார வாரியம்.. "அக்னி" வந்தாலென்ன? வெயில் எகிறினால் என்ன? இனிமேல் நிம்மதி
சென்னை: கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் மின்நுகர்வு அதிகரித்தபடியே வருகிறது. எனினும், தமிழக மின்வாரியம் தந்த நம்பிக்கை தகவல் என்ன தெரியுமா?
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் எப்போதுமே மின்தேவை என்பது அதிகமாகவே இருக்கும்.. இந்த வருடம் ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டது.

தற்போது கோடை வெயில் துவங்கிவிட்டதால், வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவையானது எப்படியும் 20,000 மெகாவாட்டை தாண்டக்கூடும் என்கிறார்கள்.. காரணம் ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும்..
பாதிப்பு: என்றாலும், பொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே தமிழகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில், மீட்டர் பாக்ஸ் பழுதடைந்தாலோ அல்லது மின்தடை ஏற்பட்டாலோ அல்லது கூடுதல் மின்கட்டணம் வசூலித்தாலோ, 94987 94987 என்ற எண்ணில் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தையும் கடந்த வாரம் எட்டியிருந்தது.. 435.85 ஜிகாவாட் ஹவர் அளவுக்கு மின்சார நுகர்வு இருந்துள்ளது.. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏசி பயன்பாடு: இந்நிலையில், வீடு, அலுவலகங்களில் 'ஏசி' பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக தெரிகிறது.. தேர்தல் திருவிழா ஒருபக்கம் நடந்துவந்த நிலையில், இரவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட், பகலில் விவசாயத்திற்கு அதிக மின் வினியோகம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. எனவே, மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவாக இம்மாதம் 17ம் தேதி 44.27 கோடி யூனிட்களாக அதிகரித்தது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 55 லட்சம் யூனிட் உயர்ந்து, 44.82 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது... இதனால் மின் தேவை இம்மாதம் 8ம் தேதி மாலை 3:30 முதல் 4:00 மணி வரை 20,000 மெகா வாட்டை தாண்டி 20,125 மெகா வாட்டாக இருந்தநிலையில், கடந்த நேற்றுமுன்தினம் 18ம்தேதி, உச்சத்துக்கு சென்றுவிட்டது.
அறிக்கை: 18ம் தேதி மாலை 3:30 முதல் 4:00 மணி வரையிலான நேரத்தில் 20,341 மெகா வாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டிவிட்டது.. எனினும், பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து மின் வாரியம் அறிக்கை ஒன்றையும் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது.. அந்த அறிக்கையில் "18ம் தேதி மீண்டும் புதிய உச்சம் தொட்டது, நம்முடைய மாநிலத்தின் மின் தேவை மற்றும் மின் நுகர்வு அதிகரித்தது.. இருப்பினும் சீரான மின் வினியோகம் உறுதி செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications