நாளைக்கு விட்டா அவ்வளவு தான்.. பத்திர ஆபிஸ் போக போறீங்களா.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: நவம்பர் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சார் பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிவோர் சொந்த ஊர் செல்ல வசதியாக நவம்பர் 11ம் தேதியான சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகமாக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு சொத்துக்கள் விற்பனை மற்றும் வாங்குதலை அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் பிறப்பு இறப்பு மற்றும் திருமண ஆவணங்களும், லீஸ் ஆவணங்களும்,, வாடகை ஒப்பந்தங்களும் பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் வேலை நாட்களாகும். இதேபோல் சுபமுகூர்த்த நாட்களும் வேலை நாட்களாகும்.

முதல் முதலாக சொத்து வாங்குவோர் சுபமுகூர்த்த நாட்களில் சொத்துக்களை பதிய அதிகம் விரும்புவதால் அந்த நாட்கள் சனி அல்லது ஞாயிறு என எந்த கிழமையாக இருந்தாலும், சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன. தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் பொதுவாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், அதில் அதிக பத்திரங்கள் பதிவாகும் 100 அலுவலகங்கள் மட்டும் அரசு விடுமுறை நாளான சனிக்கிழமையும் செயல்படுகின்றன.
இந்நிலையில் நவம்பர் 12ம் தேதியான ஞாயிறு அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலங்களில் பணிபுரிவோர் பலர் வெளியூர்களை சேர்ந்தவர்கள் ஆவார்.. எனவே அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடும் வகையில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 11ம் தேதி விடுமுறை அளிக்க பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமை அன்றும் பொதுவிடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டது. இதனால் சார் பதிவாளர் அலுவலகங்கள் நவம்பர் 11 முதல் 13ம் தேதி வரை இயங்காது. நவம்பர் 14ம் தேதி தான் இயங்கும்..
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒருநாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஒரு வாரமாக தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.. இதில் கணக்கில் வராத ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.. இதனிடையே ரெய்டுக்கு பயந்து சில சார்பதிவாளர்கள், பகலில் வேகமாக சென்றுவிடுவதாகவும் இதனால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications