Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏசி விடிய விடிய ஓடுதா? கரண்ட் பில் ஏறுதா? இனி இதை செய்யாதீங்க.. மின்சார வாரியம் தந்த சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை வெயில் கொளுத்த தொடங்கி இருக்கும் நிலையில் பல வீடுகளில் அதிகமாக ஏசி பயன்படுத்துகின்றனர். இதற்காக மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோடை காலம் துவங்கிவிட்டதால், கடும் வெப்பமும், புழுக்கமும் அதிகரித்து வருகிறது.. எனவே, வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது...

Super tips for Usage AC in your House and what are the Special maintenance work by Tamil Nadu Electricity Board

சின்ன சின்ன டிப்ஸ்: இதில், ஏர் கூலருடன் ஒப்பிடும்போது AC-க்கு செலவு அதிகம்.. காரணம், அது அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிறது. எனவே கரண்ட் பில்லும் அதிகமாகவே வருகிறது.

ACயை இரவெல்லாம் ஓடினாலும், கரண்ட் பில் குறைவாக ஒரு சில டிப்ஸ்களை கையாள வேண்டும் என்கிறார்கள்.. குறிப்பாக, குறைந்த வெப்பநிலையில் ஏசி-யை வைக்காமல் 16 அல்லது 18 டிகிரியில் வைப்பதே நல்லது. மனித உடலுக்கு தேவையானது வெப்பநிலை 24 டிகிரி என்பதால், வெப்பநிலையை 24 ஆகவே வைத்திருக்க வேண்டும். இதனால் கரண்ட் பில் மிச்சமாகும்.

ACயை பொறுத்வரை, ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும்போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதேபோல, ACயை சர்வீஸ் செய்தே பயன்படுத்த வேண்டும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.

ACயின் பில்டரை 15 நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வதும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.. காரணம், ஏர் பில்டர்களில் தூசி சேரும்போதும் அதன் கூலிங் திறன் குறைகிறாம்.. இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.

ACயை பயன்படுத்தும்போது, ரூம் கதவு, ஜன்னல்கள் மூடியே இருக்க வேண்டும். அதாவது அனல் காற்று உள்ளே வராமல் பார்த்து கொண்டாலே போதும்.. இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.

ACயை ஆன் செய்யும் போது, ரூமிலிருக்கும் சீலிங் ஃபேனையும் ஆன் செய்ய வேண்டும். AC + ஃபேன் ஒன்றாக சேர்த்து இயக்கினால் குளிர்ந்த காற்று ரூமின் மூலையை வேகமாக சென்றடையும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.

ACயை ஆன் செய்யும் போது, கண்டிப்பாக அதன் டைமரை செட் செய்ய வேண்டும்.. ரூம் குளிர்ந்ததுமே, ஏசி தானாகவே அணைந்து விடும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.

அறிவுறுத்தல்: இப்படிப்பட்ட சூழலில்தான், மின்வாரியமும் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது.. குறிப்பாக, கேரள மாநில மின்வாரிய சார்பில் வேண்டுகோள் ஒன்று மக்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதாவது AC கருவியை 25 லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், கேரளத்தில் இப்போதே கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இன்னும் வரப்போகும் மாதங்களில் மின்தடை அதிகமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, மின்தேவையை சமாளிக்கவே இந்த யோசனையை மின்வாரியம் தெரிவித்துள்ளது. அத்துடன், மோட்டர் பம்ப் ஏசி உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தவும் இன்னொரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பயன்பாடுகள்: நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின் நுகர்வானது அதிகரித்தபடியே வருகிறது. இப்போது தேர்தல் காலம் என்பதால், மின்பயன்பாடு கூடுதலாகவே உள்ளது. எனினும், பொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே தமிழகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டிருந்தது.. மீட்டர் பாக்ஸ் பழுதடைந்தாலோ அல்லது மின்தடை ஏற்பட்டாலோ அல்லது கூடுதல் மின்கட்டண வசூலித்தாலோ, 94987 94987 என்ற எண்ணில் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நம்பிக்கை: அதுமட்டுமல்ல, வெயில் காலத்தில் மின் சாதனங்களில் ரிப்பேர் ஏற்பட்டால், அதனை விரைந்து சரிசெய்ய இரவு வரை அலுவலகங்களில் இருந்தபடி, மின் வினியோக பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு உதவி பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..

மொத்தத்தில், மின்தேவையை தீர்க்கவும், கரண்ட் பிரச்சனையால் யாரும் அவதிப்படாமல் இருக்கவும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+