விஜய்க்கு ஆதரவு.. உறுதியாக சொன்ன திருமாவளவன்! நாளை ஆதரவு கடிதம் கொடுக்கிறார்
சென்னை: விஜய்க்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாதது சிக்கலாக இருந்த நிலையில், இன்று சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக ஆகியவை தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக விசிக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை நாளை தவெகவுக்கு அனுப்பி வைப்பார் என்று சொல்லப்படுகிறது.
விஜய்க்கு முதலில் ஆதரவு கொடுத்தது காங்கிரஸ்தான். இதனால் தவெகவுக்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்திருந்தது. இருப்பினும் இந்த எண்ணிக்கையை வைத்து ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் மறுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரண்டு இடதுசாரி கட்சிகளும் தங்கள் ஆதரவை விஜய்க்கு தெரிவித்திருக்கின்றன. இரு கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றன. இரு கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆதரவு மூலம் விஜய்க்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை சுமார் 116ஆக அதிகரித்திருந்தது. இருப்பினும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமல் இருந்தது. விசிக ஆதரவளித்தால் கணக்கு கரெக்ட்டாக இருக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது வரை திருமாவளவன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில் விஜய் ஆளுநரை சந்தித்திருக்கிறார். ஆனால், திருமாவளவன் தனது ஆதரவு கடிதத்தை நாளைஅனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பின்னணியில்தான் விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications