இயக்குநர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பு.. நடிகைக்கு அடி உதை.. போலீஸில் புகாரால் பரபரப்பு
வணங்கான் படப்பிடிப்பில் துணை நடிகைக்கு அடி உதை ஏற்பட்டதை அடுத்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பஞ்சாயத்தில் அப்படத்தில் நடித்து வந்த துணை நடிகை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக உள்ளவர் பாலா. கடந்த சில ஆண்டுகளாக படம் ஏதும் இயக்காமல் இருந்து வந்தார். அவர் முதல் முதலாக சேது எனும் படத்தை இயக்கினார்.
இதையடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு முத்துமலர் என்பவருடன் 2004 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

விவாகரத்து
இதையடுத்து இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வணங்கான் எனும் படத்தை பாலா இயக்கி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்கினார். இதில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறாராம்.

2டி நிறுவனம்
இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து கடந்தாண்டு மார்ச் மாதம் கன்னியாகுமரியில் ஷூட்டிங்கையும் நடத்தினர். அங்கு ஒரு மாதம் ஷூட்டிங் முடிந்த பின்னர் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டதாக சர்ச்சை கிளம்பியது.

உண்மையில்லை
இதில் உண்மையில்லை என நடிகர் சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்தாலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதையடுத்து இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டதாக அறிக்கை மூலம் அறிவித்தார் பாலா. சூர்யா விலகினாலும் வணங்கான் படத்தை கைவிடும் எண்ணம் பாலாவுக்கு இல்லை. அதனால் அருண் விஜய்யை வைத்து படத்தை எடுத்து வருகிறார்.

படப்பிடிப்பு
இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. வணங்கான் படத்தில் நடிப்பதற்காக கேரளாவில் இருந்து துணை நடிகைகள் சிலரை ஜிதின் என்ற ஒருங்கிணைப்பாளர் அழைத்து வந்துள்ளார். இதில் லிண்டா என்ற பெண்ணும் ஒருவர். இவர்களுக்கு 3 நாட்கள் நடிப்பதற்கு மொத்தம் ரூ 22, 600 ஊதியமாக கொடுப்பதாக பேசப்பட்டது.

பணம் கொடுக்கவில்லை
ஆனால் பேசியபடி பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட போது துணை நடிகை லிண்டாவை ஜிதின் அடித்து உதைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நடிகை லிண்டா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் வணங்கான் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications