நடிகையை "சீண்டிய" கேமராமேன்.. நள்ளிரவில் அக்கிரமம்.. அம்பலமான "போட்டோ ஷூட்".. பரமதாஸூம் சிக்கினார்
நடிகைக்கு பாலியல் தொல்லை தந்த கேமராமேன் உள்ளிட்ட 2 பேர் கைதாகி உள்ளனர்
சென்னை: சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை தந்த, இன்னொரு நபரை போலீசார் கைது செய்து புழலில் அடைத்துள்ளனர். என்ன நடந்தது?
வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் காசிநாதன்.. 42 வயதாகிறது.. இவர்தான், டிவி சீரியலில் கேமராமேனாக வேலை பார்த்து வருகிறார்...
இவருக்கு ஒரு துணை நடிகை பழக்கமானார்.. இந்த நடிகை, சீரியலில் தற்போது முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்..

சீண்டல்
எனினும், ஹீரோயின் சான்சுக்காக முயற்சி செய்துள்ளார்.. இந்த சான்ஸை, தான் வாங்கி தருவதாக ஆசை காட்டி உள்ளார் காசிநாதன்.. சம்பவத்தன்று, சீரியல் விஷயமாக பற்றி பேச வேண்டும் என்று அந்த பெண்ணை, தனது வீட்டிற்கு இரவு நேரத்தில் அழைத்துள்ளார் காசிநாதன்.அந்த பெண்ணும் வந்துள்ளார்.. 2 பேரும் சேர்ந்து தண்ணி அடித்துள்ளதாக தெரிகிறது.. பிறகு, அந்த பெண்ணை காசிநாதன் பாலியல் தொல்லை செய்துள்ளார்..

சேட்டை
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னுடைய நண்பருக்கு போனை போட்டு, காசிநாதன் இப்படி தவறாக நடந்துக்கொள்வதாக சொல்லி அட்ரஸை தந்துள்ளார்.. அந்த நண்பரும் உடனடியாக காசிநாதன் வீட்டுக்கு சென்று பெண்ணையும் மீட்டார். பிறகு, இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்ததின் பேரில், வளசரவாக்கம் மகளிர் போலீசார் காசிநாதனை கைது செய்தனர்.. பிறகு புழலிலும் அடைத்தனர்..

சான்ஸஸ்
42 வயதான காசிநாதன், நிறைய பெண்களை இப்படித்தான் சீரழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.. தனக்கு பிரபல டைரக்டர்கள் நிறைய பேரை தெரியும், நல்ல தொடர்பு உள்ளது என்பதை சொல்லியே ஹீரோயின் சான்ஸ் தேடும், துணை நடிகைகளுக்கு குறி வைப்பாராம்.. இவரது வார்த்தையில் விழுந்துவிட்டால், "போட்டோ ஷூட்" நடத்த வேண்டும் என்று சொல்லி, சம்பந்தப்பட்ட துணை நடிகையை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி சொல்வாராம்.. இப்படித்தான், பாதிக்கப்பட்ட துணை நடிகையும் அறிமுகமாகி உள்ளார்.. கடந்த ஜூன் மாதம் காசிநாதன் வீட்டுக்கு நைட் நேரத்தில் சென்றபோது, அவருடன் அவரது நண்பர் பரமதாஸ் என்பவரும் இருந்துள்ளார்.. அவருக்கு வயது 42..

டார்ச்சர்
இவர்கள் 3 பேரும் சேர்ந்துதான் தண்ணி அடித்துள்ளனர்.. காசிநாதன் கைதானபோது, பரமதாஸ், அதற்குள் எகிறி தப்பிவிட்டிருந்தார்.. இவரை வளசரவாக்கம் மகளிர் போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில், இப்போது சிக்கி விட்டார்.. இவரையும் கைது செய்து, தூக்கி சிறையில் வைத்துள்ளனர். இவர்கள் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினால்தான், இவர்களால் எத்தனை நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவரும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications