மொழியை காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேச்சு!
சென்னை: மொழியையும், கலாச்சாரத்தையும் காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
தாம் சிறுவயதில் சென்னை வந்த போது, இங்கு நடைபெற்ற மொழிப்போராட்டம் இன்னும் தனக்கு நன்கு நினைவில் உள்ளதாக பகிர்ந்தார்.

நீதித்துறை நிகழ்ச்சி
பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டட வசதி, மனித ஆற்றல், பிற உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து செய்து கொடுப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றக் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா நடைபெற்றது.

நீதிபதி என்.வி. ரமணா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடவசதி வழங்கும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 20 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 9 அடுக்குகள் கொண்ட நீதிமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், மொழியையும், கலாச்சாரத்தையும் காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

துரிதமாக நீதி
காலங்கள் மாறிவிட்டதாகவும் 5 நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மக்கள் 20-20 கிரிக்கெட் போட்டிக்கு மாறிவிட்டதாகவும், துரித உணவுகளை போல் நீதியையும் துரிதமாக எதிர்பார்க்கிறார்கள் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார். நீதிபதிகளை பொறுத்தவரை சமூக உண்மையை அறிந்து வைத்திருக்க வேண்டும் எனக் கோரிய அவர், மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறினார்.

மக்களின் எதிர்பார்ப்பு
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நீதித்துறை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினார். மேலும், நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு முதலிடத்தில் இருப்பதாக பாராட்டும் தெரிவித்தார்.

தடை கூடாது
ஒருவர் நீதித்துறைக்குள் வருவதற்கு மொழி, சாதி, மதம்,இனம் என எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்ற தனது விருப்பத்தை கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, பின் தங்கிய பகுதியிலிருந்து வரும் நீதிபதிகளால் தான் மக்களின் பிரச்சனையை உணர்ந்து தீர்க்க முடியும் என்பதையும் குறிப்பிட்டார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications