சென்னை ஐகோர்ட்டின் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றும் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கொலீஜியம் இந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகிய ஐந்து நீதிபதிகளை நியமிக்க ஒருமனதாக பரிந்துரைத்தது. தமிழக முதல்வரும், ஆளுநரும் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தனர். நீதிமன்ற நடைமுறைப்படி, இந்த பரிந்துரை தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஆலோசனை மேற்கொண்டது.

Supreme Court Collegium recommended to appoint 5 Madras High Court judges as permanent

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகிய 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கொலிஜியத்தின் பரிந்துரையை ஆய்வு செய்யும் சட்ட ஆணையம், அதற்கு அனுமதி அளித்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு வழங்கும். அவர் ஒப்புதல் அளித்தவுடன் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள்.

Supreme Court Collegium recommended to appoint 5 Madras High Court judges as permanent
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+