எதிர்ப்புக்கு மத்தியில் ஹைகோர்ட் நீதிபதியாக பாஜக விக்டோரியா கவுரி-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எதிர்ப்புகளுக்கு நடுவே பாஜகவின் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பாஜகவின் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார். விக்டோரியா நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியமானது சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகளை பரிந்துரைத்தது. இதில் விக்டோரியா கவுரி என்பவரும் இடம் பெற்றிருந்தார்.

விக்டோரியா கவுரி, பாஜகவை சேர்ந்தவர். பாஜகவின் அகில இந்திய மகளிரணி செயலாளராக இருந்தார். சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பேசி சர்ச்சைகளில் சிக்கியவர் விக்டோரியா கவுரி. ஆகையால் விக்டோரியாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என என்ஜிஆர் பிரசாத், வைகை, மோகன், வி.சுரேஷ் உள்ளிட்ட 21 மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் மனு அளித்தனர்.
அதில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்துவ அமைப்புகளா என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாச்சார படுகொலை செய்வதாகவும் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் உள்ளது எனவும் தங்களது மனுவில் மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். ஆகையால் விக்டோரியா கெளரி நீதிபதி பதவிக்கு அவர் தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விக்டோரியா கெளரியை நீதிபதியாக நியமித்த பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்திடமும் மூத்த வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
ஆனால் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் இதனை கவனத்தில் கொள்ளவில்லை. தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக விக்டோரியா கவுரி உள்ளிட்ட 5 பேரை கொலீஜியம் பரிந்துரைத்ததை ஏற்று மத்திய அரசு நியமன ஆணை வெளியிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் கீழ் தொடர்புடைய விதிகளின்படி அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய அமைச்சர் கிரண் ரஜிஜூ பதிவிட்டிருந்தார். விக்டோரியா கவுரியுடன் பாலாஜி, ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், திலகவதி ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். மத்திய அரசின் இந்த முடிவு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே விக்டோரியா கவுரியின் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கும் தொடரப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் இந்த வழக்கை தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் அவர் வலியுறுத்தினார். இந்த வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications