Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஊக்கை விழுங்கிவிட்டேன்.." குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் மேம்பால திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.கஸ்டாலின், கோடம்பாக்கம் மேம்பாலம் கட்ட கலைஞர் நினைத்தது எப்படி? என்பது குறித்து தனது குழந்தை பருவத்தில் நடைபெற்ற சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசினார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- அண்ணா, கத்திப்பாரா மேம்பாலங்கள், செம்மொழி பூங்கா, வள்ளுவர் கோட்டம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டன. சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

Swallowed a safety pin when I was child: CM M K Stalins speech at the flyover inauguration

புதிய மேம்பாலம் கட்டப்பட்டதன் மூலம் பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, வேப்பேரி, புரசைவாக்கம் பகுதி மக்கள் பயன் அடைய உள்ளனர். இந்த பாலத்தில் நாள்தோறும் சராசரியாக 70 ஆயிரம் வாகனங்கள் செல்லக்கூடும் என்று அதிகாரிகள் சொல்கின்றனர். எனவே இந்த வட்டார மக்களுக்கு பயனுள்ள சாலையாக இது இருக்கப் போகிறது. கருணாநிதியின் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால், மெட்ரோ திட்டப் பணியால் பாதிக்கப்பட்ட சில சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். சென்னையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது திமுக ஆட்சியில் தான். மழைநீர், மெட்ரோ திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருப்பது உள்கட்டமைப்புதான். அந்த உள்கட்டமைப்பை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம்.

பாலம் திறப்பு விழாவில் நான் கலந்து கொள்ளும் இந்த நேரத்தில் எனக்கு பசுமையாக ஒன்று நினைவுக்கு வருகிறது. இதை எப்போதும் மறக்க மாட்டேன். அது இப்பவும் மனதில் இருக்கும். அது என்னவென்றால், நான் சிறு குழந்தையாக இருந்த போது கோடம்பாக்கம் பகுதியில் குடியிருந்தோம். தலைவர் கலைஞர் திரைப்படத்திற்கு வசனம் எழுதி கொண்டு இருப்பார். பெரும்பாலும் சினிமா ஸ்டூடியோக்கள் கோடம்பாக்கம் பகுதியில் தான் அதிகம் இருக்கும்.

இப்போது இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட் இருக்கும். பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும் அதை கிராஸ் செய்து தான் போக வேண்டும். நான் குழந்தையாக இருந்த போது வீட்டில் சேஃப்டி பின் (ஊக்கு) திறந்த நிலையில் தரையில் கிடந்தது. கைக்குழந்தையாக இருந்த நான் தரையில் தவழ்ந்து கொண்டு இருந்த போது ஊக்கை எடுத்து விழுங்கிவிட்டேன்.

அதை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று வீட்டில் என்னவெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், ஒன்னும் முடியவில்லை. அதன்பிறகு டாக்டரிடம் கூப்பிட்டு போக முடிவு செய்து காரில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் வந்து நின்றுவிட்டோம். அந்த கேட் திறந்த பிறகுதான் மருத்துவமனைக்கு சென்று ஊக்கை எடுத்தார்கள். திறந்த நிலையில் ஊக்கு வந்தது. அதனால்தான் எஃக்கையே விழுங்கிவிட்டு உயிரோடு இருக்கிறான்.

அதனால், எஃகு உள்ளம் கொண்ட ஸ்டாலின் பெயரை சூட்ட வேண்டும் என்று அப்போதே கலைஞர் முடிவு செய்தார். நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி இதையெல்லாம் எழுதியிருக்கிறார். எதற்காக இதை இப்போது சொல்கிறேன் என்றால் ஊக்கை விழுங்கிய குழந்தையே எடுத்துக் கொண்டு போக முடியவில்லையே.. இதனால் எத்தனை பேர் அவஸ்தை படுவார்கள். எனவே இந்த இடத்தில் ஒரு பாலம் கட்டினால் என்ன? என்று அப்போதே கலைஞர் முடிவு செய்தார். அதற்கு பிறகுத்தான் அந்த இடத்தில் பாலம் உருவானது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+