வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப்? இந்திய பிளேயிங் 11ல் நடக்கும் ஒரு மாற்றம்.. சூர்யகுமார் அப்டேட்!
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய அணியின் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு, அவரது இடத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ள இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி அபார ஃபார்மில் இருக்கும் சூழலில், இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரேயொரு மாற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கை எளிதாக எதிரணிகள் கணித்து வருகின்றனர். அவரின் பவுலிங் வெரைட்டி, முதல் பந்தாக கூக்ளியை தான் வீசுவார் என்பது வரை தெரிந்துவிட்டன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேக்கப் பெத்தல் 13 பந்துகளில் 42 ரன்களை விளாசி தள்ளினார். அதுமட்டுமல்லாமல் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளும் கூட வருண் சக்கரவர்த்தி பவுலிங்கை பதம் பார்த்தன.
இதனால் அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி இடத்தி குல்தீப் யாதவ் விளையாடக் கூடும் என்று சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், வருண் சக்கரவர்த்தியின் ஃபார்ம் குறித்த கவலை எங்களுக்கு இல்லை. எங்களின் கவனம் வெற்றியில் மட்டுமே இருக்கிறது.
வருண் சக்கரவர்த்தி உலகின் நம்பர் 1 டி20 பவுலர்.. அவருக்கு இந்திய் அணியின் வெற்றிக்கு எப்படி உதவ முடியும் என்பது நன்றாக தெரியும்.. நாங்கள் எதையும் எளிதாக கையாளுவோம்.. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவதே மிகப்பெரிய பெருமை என்று தெரிவித்துள்ளார். மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் இதுவரை ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராசியில்லாத அகமதாபாத் மைதானம்.. திடீரென ஹோட்டலை மாற்றிய இந்திய அணி.. தோல்வியை தவிர்க்க மூடநம்பிக்கை? -
அபிஷேக் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையே காலி.. வீக்னஸை பிடித்துவிட்டார்கள்.. சீண்டும் முகமது ஆமீர்! -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக












Click it and Unblock the Notifications