வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம்.. திருமுல்லைவாயல் காவல் நிலையம்.. ரிவ்யூவில் 4 ஸ்டார்
Recommended Video
சென்னை: வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் என்றால் அது திருமுல்லைவாயல் காவல் நிலையம் என இளைஞர் ஒருவர் கொடுத்த பாராட்டுகளால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த லோகேஷ்வரன், நள்ளிரவில் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமுல்லைவாயல் போலீஸார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து காவல் நிலைய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த லோகேஸ்வரன் கூறுகையில் வண்டியின் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் நள்ளிரவு பயணம் செய்தேன். இதனால் நான் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டேன். அந்த காவல் நிலையம் முக்கிய சாலையில் அமைந்துள்ளது.
மிகவும் சுத்தமாக உள்ளது. போலீஸார் மிகவும் அன்பாக நடத்துகிறார்கள். எனக்கு எந்தவித தொல்லையும் கொடுக்கவில்லை. என்னுடைய தகவல்கள் மற்றும் கைவிரல் ரேகையை பெற்று கொண்ட அவர்கள் லஞ்சம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் என்னை விடுவித்தனர்.

வாழ்வில் பார்க்க வேண்டிய இடங்களில் திருமுல்லைவாயல் காவல் நிலையமும் ஒன்று என அந்த இளைஞர் ரிவ்யூவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 4 ஸ்டார்களையும் கொடுத்துள்ளார். இவரது பதிவு வைரலாகி வருகிறது.
விசாரணையில் லோகேஷ்வரன் சென்னையில் இருக்கும் இடங்களுக்கு சென்று அதுகுறித்து கூகுள் ரிவ்யூ செய்யும் வழிகாட்டி என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக அம்பத்தூர் காவல் நிலைய உயரதிகாரிகள் கூறுகையில் நள்ளிரவில் யாரையும் நாங்கள் கைது செய்யவில்லை. அப்படி இருக்கும் இந்த கருத்து தவறானது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications