சென்னை டூ நாகர்கோவில் போறது ரொம்ப ஈஸி.. தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்கள்.. பாருங்க!
சென்னை: சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிக்கு எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கினாலும் போதாது. அந்த அளவிற்கு மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இந்நிலையில் சென்னை--விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை தாம்பரத்தில் இருந்து, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06041) , செப்டம்பர் 15, 22, 29, அக்டோபர், 6, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் ரயில் (ரயில் எண்: 06042 ) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு அதிகாலை 4.10 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில் செப்டம்பர் மாதம் 16, 23, 30 அக்டோபர் 7, 14, 21 மற்றும் 28 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இது தவிர நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06012) நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் செப். 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06011) தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் செப்டம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது போல், மதுரை, நெல்லைக்கும், கோவைக்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் தீபாவளி பண்டிகையை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இப்போதைய நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு செல்வது கடினம் என்ற நிலை உள்ளது.எனவே மக்கள் நலன் கருதி சிறப்பு ரயில்களையும், முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications