சென்னை டூ நாகர்கோவில் போறது ரொம்ப ஈஸி.. தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்கள்.. பாருங்க!
சென்னை: சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிக்கு எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கினாலும் போதாது. அந்த அளவிற்கு மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இந்நிலையில் சென்னை--விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை தாம்பரத்தில் இருந்து, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06041) , செப்டம்பர் 15, 22, 29, அக்டோபர், 6, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் ரயில் (ரயில் எண்: 06042 ) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு அதிகாலை 4.10 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில் செப்டம்பர் மாதம் 16, 23, 30 அக்டோபர் 7, 14, 21 மற்றும் 28 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இது தவிர நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06012) நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் செப். 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06011) தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் செப்டம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது போல், மதுரை, நெல்லைக்கும், கோவைக்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் தீபாவளி பண்டிகையை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இப்போதைய நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு செல்வது கடினம் என்ற நிலை உள்ளது.எனவே மக்கள் நலன் கருதி சிறப்பு ரயில்களையும், முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications