Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ நாகர்கோவில் போறது ரொம்ப ஈஸி.. தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்கள்.. பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிக்கு எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கினாலும் போதாது. அந்த அளவிற்கு மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இந்நிலையில் சென்னை--விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை தாம்பரத்தில் இருந்து, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06041) , செப்டம்பர் 15, 22, 29, அக்டோபர், 6, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tambaram - Nagercoil Weekly Express Special Train announced by southern railway

நாகர்கோவில் - தாம்பரம் ரயில் (ரயில் எண்: 06042 ) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு அதிகாலை 4.10 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில் செப்டம்பர் மாதம் 16, 23, 30 அக்டோபர் 7, 14, 21 மற்றும் 28 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

இது தவிர நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06012) நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் செப். 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

மறுமார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06011) தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் செப்டம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது போல், மதுரை, நெல்லைக்கும், கோவைக்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் தீபாவளி பண்டிகையை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இப்போதைய நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு செல்வது கடினம் என்ற நிலை உள்ளது.எனவே மக்கள் நலன் கருதி சிறப்பு ரயில்களையும், முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+