சென்னை டூ நாகர்கோவில் போறது ரொம்ப ஈஸி.. தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்கள்.. பாருங்க!
சென்னை: சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிக்கு எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கினாலும் போதாது. அந்த அளவிற்கு மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இந்நிலையில் சென்னை--விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை தாம்பரத்தில் இருந்து, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06041) , செப்டம்பர் 15, 22, 29, அக்டோபர், 6, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் ரயில் (ரயில் எண்: 06042 ) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு அதிகாலை 4.10 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில் செப்டம்பர் மாதம் 16, 23, 30 அக்டோபர் 7, 14, 21 மற்றும் 28 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இது தவிர நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06012) நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் செப். 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06011) தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் செப்டம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது போல், மதுரை, நெல்லைக்கும், கோவைக்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் தீபாவளி பண்டிகையை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இப்போதைய நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு செல்வது கடினம் என்ற நிலை உள்ளது.எனவே மக்கள் நலன் கருதி சிறப்பு ரயில்களையும், முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications