Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் பத்திர ஆபீஸிலேயே சார் பதிவாளர் ரேவதி.. ஈஸியான ட்ரிக்ஸால் சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரேவதி என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார். சார் பதிவாளர் ரேவதி, இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

சிலர் பத்திரப்பதிவு செய்யும் நிலத்தை மதிப்பை குறைவாக காட்டி பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். ஏனெனில் அங்கு நிலத்தின் வழிகாட்டிமதிப்பு அதிகமாக இருக்கும், அப்படியான நிலையில், குறைத்து பதிவு செய்ய சார் பதிவாளர்களை அணுகுவார்கள். அவர்கள் நியாயமான காரணமாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற்று அந்த பகுதியில் ஒரே மாதிரியான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்வார்கள்.

Tambaram Sub-Registrar Revathi caught accepting bribe to register land by reducing its value

நிலத்தின் மதிப்பு

மற்றபடி வழிகாட்டி மதிப்பிற்கு கீழ் பத்திரங்களை பதிவு செய்ய முடியாது. எனினும் சிலர் சார் பதிவாளர்களின் துணையுடன் நிலத்தை குறைந்த மதிப்பாக காட்டி பத்திரப்பதிவு செய்து மோசடி செய்வதும் நடக்கிறது. இந்நிலையில் இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தாம்பரம் பெண் சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் சார் பதிவாளர் ரேவதி

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்த்தில் தான் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ரேவதி என்பவர் பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார்.
இவரும், இவருக்கு கீழே பணிபுரியும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களிடம் அதிக அளவில் லஞ்சப்பணம் வாங்கி வருவதாக பல்வேறு புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்ததாம். பத்திர பதிவுத்துறை உயர் அதிகாரிகள், இது தொடர்பாக ஆய்வு செய்து அவர்களை எச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது.

10 லட்சம் லஞ்சம்

இந்தநிலையில் தாம்பரம் அருகே நெடுங்குன்றம் பகுதியில் நிலம் பதிவு செய்ய வந்தவரிடம் நிலத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் லஞ்சமாக தரும்படி சார்பதிவாளர் ரேவதி கேட்டாராம். அப்போது பத்திரம் பதிய வரும்போது ரூ.2 லட்சமும், பத்திரப்பதிவு முடிந்த பிறகு பத்திரத்தை வாங்கும்போது மீதி ரூ.8 லட்சமும் பணம் தருவதாக பத்திரம் பதிவு செய்ய வந்தவர் தெரிவித்துள்ளார்.

கையும் களவுமாக பிடிக்க முடிவு

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சார்பதிவாளரை கையும் களவுமாக பிடிப்பதற்காக ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தி அனுப்பினார்கள்.

2 லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்

அதன்படி தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சார் பதிவாளர் ரேவதி அறிவுறுத்தலின்பேரில் பத்திரப்பதிவு பணிகள் செய்யும் பிரவீன் குமார் என்பவரிடம் கொடுத்தார்கள். அவர் ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சார்பதிவாளர் ரேவதி மற்றும் பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

4 மணி நேரமாக விசாரணை

பின்னர் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சார் பதிவாளர் ரேவதியை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+