தாம்பரம் பத்திர ஆபீஸிலேயே சார் பதிவாளர் ரேவதி.. ஈஸியான ட்ரிக்ஸால் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரேவதி என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார். சார் பதிவாளர் ரேவதி, இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
சிலர் பத்திரப்பதிவு செய்யும் நிலத்தை மதிப்பை குறைவாக காட்டி பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். ஏனெனில் அங்கு நிலத்தின் வழிகாட்டிமதிப்பு அதிகமாக இருக்கும், அப்படியான நிலையில், குறைத்து பதிவு செய்ய சார் பதிவாளர்களை அணுகுவார்கள். அவர்கள் நியாயமான காரணமாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற்று அந்த பகுதியில் ஒரே மாதிரியான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்வார்கள்.

நிலத்தின் மதிப்பு
மற்றபடி வழிகாட்டி மதிப்பிற்கு கீழ் பத்திரங்களை பதிவு செய்ய முடியாது. எனினும் சிலர் சார் பதிவாளர்களின் துணையுடன் நிலத்தை குறைந்த மதிப்பாக காட்டி பத்திரப்பதிவு செய்து மோசடி செய்வதும் நடக்கிறது. இந்நிலையில் இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தாம்பரம் பெண் சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் சார் பதிவாளர் ரேவதி
சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்த்தில் தான் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ரேவதி என்பவர் பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார்.
இவரும், இவருக்கு கீழே பணிபுரியும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களிடம் அதிக அளவில் லஞ்சப்பணம் வாங்கி வருவதாக பல்வேறு புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்ததாம். பத்திர பதிவுத்துறை உயர் அதிகாரிகள், இது தொடர்பாக ஆய்வு செய்து அவர்களை எச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது.
10 லட்சம் லஞ்சம்
இந்தநிலையில் தாம்பரம் அருகே நெடுங்குன்றம் பகுதியில் நிலம் பதிவு செய்ய வந்தவரிடம் நிலத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் லஞ்சமாக தரும்படி சார்பதிவாளர் ரேவதி கேட்டாராம். அப்போது பத்திரம் பதிய வரும்போது ரூ.2 லட்சமும், பத்திரப்பதிவு முடிந்த பிறகு பத்திரத்தை வாங்கும்போது மீதி ரூ.8 லட்சமும் பணம் தருவதாக பத்திரம் பதிவு செய்ய வந்தவர் தெரிவித்துள்ளார்.
கையும் களவுமாக பிடிக்க முடிவு
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சார்பதிவாளரை கையும் களவுமாக பிடிப்பதற்காக ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தி அனுப்பினார்கள்.
2 லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்
அதன்படி தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சார் பதிவாளர் ரேவதி அறிவுறுத்தலின்பேரில் பத்திரப்பதிவு பணிகள் செய்யும் பிரவீன் குமார் என்பவரிடம் கொடுத்தார்கள். அவர் ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சார்பதிவாளர் ரேவதி மற்றும் பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
4 மணி நேரமாக விசாரணை
பின்னர் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சார் பதிவாளர் ரேவதியை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications