திருவாரூர் இடைத் தேர்தல்.. நாம் தமிழர் வேட்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது
சென்னை: திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது போட்டியிடுகிறார்.
திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முதல் வேட்பாளர் சாகுல் அமீதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
வருகின்ற சனவரி 28, அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண்கிறது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தேர்தல் களப்பணிகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
சாகுல் அமீது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.