Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீண்ட நாளைக்கு பிறகு தமிழகத்தில் ஷாக் மாற்றம்.. சரிந்தது டிஸ்சார்ஜ் கேஸ்கள்.. உயர்ந்தது கொரோனா

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் செப்டம்பர் 9 ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1,596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,534 பேர் ஒரே நாளில் மீண்டனர். மீண்டவர்கள் எண்ணிக்கையை விட, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நீண்ட நாளைக்கு பிறகு அதிர்ச்சிகரமான இந்த மாற்றம் நடந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 9 ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 9 ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,534 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,77,646 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு

தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் 9ம் தேதி மாலை நிலவரப்படி 21 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 16 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,180 ல் இருந்து 16,221 ஆக சரிந்தது. கொரோனா பாதிப்பு சிறிய அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இதனிடையே மீண்டவர்கள் எண்ணிக்கையை விட, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நீண்ட நாளைக்கு பிறகு அதிர்ச்சிகரமான இந்த மாற்றம் நடந்துள்ளது

எவ்வளவு

எவ்வளவு

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 224 பேரும், சென்னையில் 186 பேரும், ஈரோட்டில் 130 பேரும், செங்கல்பட்டில் 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2165 பேர் உள்ளனர். அதை தொடர்ந்து சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+