தமிழகத்தில் கொரோனா.. தஞ்சாவூரில் ஒரே நாளில் 23 பேர் மரணம்.. 'கோவையை முந்திய ஈரோடு'
சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் . கொரோனா தொற்றால் 4,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 102 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக தஞ்சையில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5044 பேர் மீண்டனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 38,191ல் இருந்து 37526 ஆக குறைந்துள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,84,177 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 5,044 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,13,930 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 37,526 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா மரணங்கள்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக தஞ்சையில் 23 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 10 பேரும், வேலூரில் 7 பேரும், சேலத்தில் 5 பேரும் பலியாகி உள்ளனர்.

ஈரோட்டிலும் உயர்வு
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று 498 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 411 பேருக்கும், சேலத்தில் 279 பேருக்கும், சென்னையில் 249 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் 256 பேருக்கும், தஞ்சாவூரில் 248 பேருக்கும், திருச்சியில் 198 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு முதலிடம்
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புடன் 37,526 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக ஈரோட்டில் 4080 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். கோவையில் 3805 பேரும், சென்னையில் 2931 பேரும், சேலத்தில் 1685 பேரும், செங்கல்பட்டில் 1897 பேரும், தஞ்சாவூரில் 1990 பேரும், திருப்பூரில் 1666 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications