தென்னந்தோப்புகளில் வாழை -ஜாதிக்காய் ஊடுபயிர்! தமிழக வேளாண் பட்ஜெட்டில் ரூ.5.70 கோடி நிதி ஒதுக்கீடு!
சென்னை: தென்னந்தோப்புகளில் வாழையும், ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட, 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
மேலும், தென்னை சாகுபடி பற்றி பேசும் போது சீவகசிந்தாமணி பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் உரை வருமாறு;

தென்னை சாகுபடி: ''தென்னை சாகுபடியை, 10,000 ஏக்கர் பரப்பில் புதிதாக ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்ள, ஏழு இலட்சம் தரமான தென்னை நாற்றுக்கள், 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் நிதியில் வழங்கப்படும். தென்னை பயிரிட்டு, ஐந்து வருடம் வரையிலான தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட, 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ''
தென்னந்தோப்புகளைப் புதுப்பித்தல்: ''தென்னை நாற்றங்கால்கள் அமைத்தல், நாற்றங்கால் மேம்பாடு, பழைய தென்னந்தோப்புகளைப் புதுப்பித்தல், தென்னங்கழிவுகளை மக்கச் செய்து இயற்கை உரங்களாக மாற்ற இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்குவதோடு தென்னை சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிவதற்கு ஏதுவாக, விவசாய நிலங்களிலும், தென்னை நாற்றங்கால் மையங்களிலும், தென்னை செயல் விளக்கத் திடல்கள் அமைத்து உற்பத்தியினை அதிகரித்திட வழிவகை செய்யப்படும். இதற்கென ரூ. 12 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.''
25,000 ஏக்கர்: ''தென்னை சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களை, உரிய நேரத்தில் குறித்த அளவில் அளிப்பதால் தென்னையில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 25,000 ஏக்கர் பரப்பில் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்படும். இதற்கென 12 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ''
கேரளா வேர் வாடல் நோய்: ''தென்னையில் கேரளா வேர் வாடல் நோயினையும், வெள்ளை ஈக்களையும் கட்டுப்படுத்தத் தேவையான ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை உத்திகளை, விவசாயிகளுக்கு வழங்கிட, ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.''
சூரிய சக்தி மின் உலர்த்திக் கூடம்: ''உரிய நேரத்தில் தேங்காயினை அறுவடை செய்தல், சூரிய சக்தி மின் உலர்த்திக் கூடத்தில் உலர்த்துதல், எண்ணெய் தயாரித்தல் முதலியன ஐந்து தென்னை நாற்றுப் பண்ணைகளில் செயல்விளக்கமாக விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.''
நுண்ணீர்ப் பாசனத் திட்டம்: ''2024-2025-ஆம் ஆண்டில், 2 இலட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில், ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 232 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒன்றிய நிதியுடன், 540 கோடியே 73 இலட்சம் ரூபாய் மாநில நிதியை ஒருங்கிணைத்து 773 கோடியே 23 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும்.''
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications