Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. இதில் பெரும் ஆச்சரியமாக, கடந்த 30 ஆண்டுகாலமாகத் தமிழகமும் புதுச்சேரியும் ஒரே நாளில் தேர்தலைச் சந்தித்து வந்த நடைமுறை இந்த முறை மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.

Tamil Nadu and Puducherry Election 2026

அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

மேற்கு வங்கத்தில், ஏப்ரல் 23 (முதற்கட்டம்) மற்றும் ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்) ஆகிய இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள்: ஒரு வரலாற்றுப் பார்வை

கடந்த 10 சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வாக்குப்பதிவு தேதிகளைக் கீழே உள்ள பட்டியலில் காணலாம். இதில் 2001-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இரு பகுதிகளும் ஒரே நாளில்தான் தேர்தலைச் சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2026: ஏப்ரல் 23 (தமிழகம்) | ஏப்ரல் 09 (புதுச்சேரி) - [தேதிகள் மாற்றம்]

2021: ஏப்ரல் 06 (இரு மாநிலங்களும்)

2016: மே 16 (இரு மாநிலங்களும்)

2011: ஏப்ரல் 13 (இரு மாநிலங்களும்)

2006: மே 08 (இரு மாநிலங்களும்)

2001: மே 10 (இரு மாநிலங்களும்)

1996: ஏப்ரல் 27 & மே 04 (தமிழகம் - இரு கட்டம்) | ஏப்ரல் 27 (புதுச்சேரி) (30 ஆண்டுக்கு முன் தேர்தல் தேதிகளில் புதுவை - தமிழ்நாடு இடையே வேறுபாடு இருந்துள்ளது)

1991: ஜூன் 15 (இரு மாநிலங்களும்)

1989: ஜனவரி 21 (தமிழகம்) | (புதுச்சேரிக்கு 1990-ல் தேர்தல் நடந்தது)

1984: டிசம்பர் 24 (இரு மாநிலங்களும்)

இந்த முறை மாற்றம் ஏன்? - முக்கிய காரணங்கள்

பொதுவாகத் தேர்தல் ஆணையம் நிர்வாக வசதிக்காகவும், பாதுகாப்புப் படையினரை நகர்த்துவதற்காகவும் அண்டை மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தும். ஆனால் 2026-ல் இந்த மாற்றம் ஏற்படக் காரணங்களாகக் கருதப்படுபவை:

பாதுகாப்புப் படைகளின் நகர்வு: கேரளா மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அங்குப் பணியில் ஈடுபடும் மத்தியப் பாதுகாப்புப் படையினரை (CAPF), ஏப்ரல் 23-ல் தேர்தல் நடக்கும் தமிழகத்திற்கு எளிதாக இடமாற்றம் செய்ய இந்த 14 நாள் இடைவெளி உதவும். சிறிய மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற பார்முலா இந்த முறை கடைபிடிக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR): தமிழகத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (Special Intensive Revision) மூலம் சுமார் 11.55% வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தங்களுக்குப் பிந்தைய முதல் தேர்தல் என்பதால், கூடுதல் கண்காணிப்பு அவசியமாகக் கருதப்படுகிறது.

பதவிக்காலம் முடிவடையும் தேதி: தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 10-ல் முடிகிறது. ஆனால் புதுச்சேரியின் பதவிக்காலம் ஜூன் 15 வரை உள்ளது. இந்த கால இடைவெளியும் தேர்தல் ஆணையத்திற்குத் தேதிகளைத் தனித்தனியாக ஒதுக்க வழிவகை செய்துள்ளது.

வாக்குப்பதிவு தேதிகள் மாறினாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டுக்குமே வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில், அதாவது மே 4, 2026 அன்று நடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+