தமிழக மீனவர்கள் பிரச்சனை.. கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு.. சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க 74 முறை கடிதங்களை எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்கடையால் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க 74 முறை கடிதங்களை எழுதியுள்ளேன். தமிழக மீனவர்களை போல் மற்ற மாநிலங்களில் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் சும்மா பார்த்து கொண்டிருப்பார்களா? மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications