24 ஆம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும்! சபாநாயகர் அப்பாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ஜனவரி 24 ஆம் தேதி வரை நடப்பாண்டு முதல் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த அலுவல் குழு ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சேந்தமங்கலம் எம்எல்ஏ மறைவுக்கு இரங்கல் தெரிவிப்புடன் நாளைய கூட்டம் ஒத்தி வைக்கப்படும். பின்னர் 22, 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்தப்படும். அதன் பிறகு 24-ஆம் தேதி சனிக்கிழமையுடன் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் முடிவடைகிறது என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications