Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊக்க மருந்து பயன்படுத்தியதாக புகார்.. தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊக்க மருத்து புகாரில் தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் களத்துக்கு திரும்பிய நிலையில் தற்போது நடந்த ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

tamil-nadu-sprinter-dhanalakshmi-banned-for-eight-years-after-failing-doping-test-again

தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர்

திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த வீராங்கனையான தனலட்சுமி பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ள தனலட்சுமி சேகர், ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு தேர்வாகி இருந்தார்.

கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தொடரில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23 புள்ளி 26 விநாடிகளில் கடந்து சாதனை படைத்து இருந்தார். இதன் மூலம் 23 ஆண்டுகள் பி.டி. உஷாவின் சாதனையை தனலட்சுமி தகர்த்து எறிந்தார். இப்படி தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை செய்த தனலட்சுமி சேகர் தற்போது ஊக்க மருந்து சர்சையில் சிக்கி தடையை எதிர்கொண்டுள்ளார்.

ஊக்க மருந்து சோதனை

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பிர்மிங்காஹாமில் நடைபெற்றது. இந்த காமன்வெல்த் தடகள போட்டியில் இந்தியா 36 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவினை அறிவித்து இருந்தது. மொத்தம் 72 நாடுகள் பங்கேற்று இருந்த நிலையில் இதில் பல்வேறு பதக்கங்களை வென்றது.

இந்த காமன்வெல்த் தொடரில் 200 மீட்டர் தடகளம் மற்றும் ரிலே போட்டியில் தமிழக வீராங்கனையான தனலட்சுமி சேகர் கலந்துகொள்ள இருந்தார். இதனால் இப்போட்டியில் தனலட்சுமி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு முன்பாக ஊக்க மருந்து பயன்படுத்தியிருக்கிறார்களா என சோதிப்பதற்காக அனைத்து நாடுகளின் வீரர், வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்தன.

3 ஆண்டுகள் தடை விதிப்பு

இந்த சோதனையின் முடிவில் தமிழக வீராங்கனை தனலட்சுமி சேகர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. அதாவது தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தினார் என சோதனை முடிவில் தெரியவந்தது. இதன் பின்னர் இந்த போட்டியில் இருந்தே தனலட்சுமி நீக்கப்பட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதன்பின்னர் தனலட்சுமிக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊக்க மருந்தை தான் பயன்படுத்தியதை அவரே ஒப்புக்கொண்டார். இதனால் இந்த தடையானது 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இவரது தடைக்காலம் முடிவடைந்தது. அதாவது கடந்த ஆகஸ்டு மாதம் இவரது தடைக்காலம் முடிவடைந்து இருந்தது.

8 ஆண்டுகள் தடை

இதன் பிறகு அவர் மீண்டும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் மீண்டும் அவருக்கு நடந்த ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு மேலும் 8 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் அறிவித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+