தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளைத் தொடங்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். அந்த 4 தொகுதிகளும், முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

திருச்சி கிழக்கு
தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இரண்டு தொகுதிகளில் (பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு) போட்டியிட்டு வெற்றி பெற்றதால், பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கை ராஜினாமா செய்தார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
மதுராந்தகம்
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பெருந்துறை
பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ். ஜெயக்குமார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தாராபுரம்
தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பி. சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் அந்த 4 தொகுதிகளும், தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் 5 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டன.
விரைவில் இடைத்தேர்தல்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (RO) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ARO) நியமிக்கப்பட்டு, வாக்குச்சாவடி உள்கட்டமைப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை வரும் 22ஆம் தேதிக்குள் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
-
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications