புதுக்கோட்டை தி.மு.க எம்.பி அப்துல்லா தமிழில் அனுப்பிய கடிதம்.. முதல் வரியே இப்படி.. பாஜக பதிலடி
சென்னை: புதுக்கோட்டையைச் சேர்ந்த தி.மு.க எம்.பி அப்துல்லாவுக்கு ஒரு மத்திய அமைச்சர் அலுவல்சார் கடிதம் ஒன்றை ஹிந்தி மொழியில் எழுதி விட்டாராம். உடனே பொங்கிய அப்துல்லா மத்திய அமைச்சருக்கு தமிழ் மொழியில் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் அவர் கைப்பட எழுதிய தமிழ் கடிதத்தில் முதல் வரியிலேயே பிழை என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தி.மு.க எம்.பி அப்துல்லா ரயில்வே வழங்கும் உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்தும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத விற்பனையை நிறுத்துவது குறித்து மாநிலங்களவையி பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசியிருந்தார். இதற்கு ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங், கடிதம் வாயிலாக திமுக எம்.பி அப்துல்லாவிற்கு பதில் அளித்தார்.

ஆனால் அது இந்தி மொழியில் இருந்துள்ளது. இந்நிலையில், அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கள் மீண்டும் இந்தியிலேயே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அப்துல்லா வெளியிட்டிருந்த பதிவில், “மாண்புமிகு ரயில்வே இணை அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில்தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு “புரியும்படி” பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருந்தார். அத்துடன் தமிழில் கைப்பட எழுதிய கடிதத்தையும் அனுப்பி வைத்தார்.
அக்கடிதத்தில் தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளார். எனக்கு இந்தி மொழி தெரியாத காரணத்தால் அதில் என்ன எழுதியுள்ளீர்கள் என எனக்குத் தெரியவில்லை. எனவே அடுத்த முறை கடிதம் அனுப்பும் போது ஆங்கிலத்தில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அத்துடன் அந்த கடிதத்தையும், தனக்கு இந்தி மொழியில் வந்த கடிதத்தையும் தனது X தள பக்கத்திலும் அப்துல்லா பதிவிட்டுள்ளார்.

இதற்கு தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ காலையிலேயே ஒரு தமிழ் பஞ்சாயத்து.. தி.மு.க எம்.பி அப்துல்லாவுக்கு ஒரு மத்திய அமைச்சர் அலுவல்சார் கடிதம் ஒன்றை ஹிந்தி மொழியில் எழுதி விட்டாராம். உடனே பொங்கிய அப்துல்லா மத்திய அமைச்சருக்கு 'நோஸ்கட்’ கொடுக்கிறேன் பேர்வழி என தமிழ் மொழியில் பதில் கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் பாருங்களேன் அவர் கைப்பட எழுதிய தமிழ் கடிதத்தில் முதல் வரியிலேயே பிழை.
“நலம் விளைகிறேன்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி இருந்தார். ஆனால் விளைகிறேன் என்று ஒரு சொல்லே தமிழில் இல்லை. அதை எடுத்து சொல்லிய போது பிழையான தமிழுக்கு முட்டு வேறு கொடுக்கிறார், விளைகிறேன் என்றால் “விளக்குதல்” என்கிறார். காலக்கொடுமை.

தமிழ் மீது தி.மு.க-வினர் போன்று போலி அன்பின்றி; உண்மையான காதல் கொண்டவனாக மீண்டும் சொல்கிறேன் விளைகிறேன் என்ற ஒரு சொல்லே தமிழில் கிடையாது. கிடையவே கிடையாது. விழைகிறேன் என்பதே சரியான பயன்பாடு. விழைகிறேன் என்றால் விரும்புகிறேன் என பொருள். நலம் விழைகிறேன் என்றால் உங்கள் நலத்தை விரும்புகிறேன் என அர்த்தம். விளைத்தல் என்றால் விளைவிப்பது, அரிசி விளைவித்தல் போல. நலத்தை விளைவிக்க எல்லாம் முடியாது அப்துல்லா சார்." இவ்வாறு கூறியுள்ளார்.
-
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications