Tamil Nadu Budget 2019: மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்
சென்னை: மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டத்தை அமைக்கவுள்ளதாக தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பட்ஜெட் உரையை ஓபிஎஸ் ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில் மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும்.
நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வேட்டி, சட்டை இலவசமாக தரப்படுகிறது. சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார் ஓபிஎஸ்.
Comments
English summary
Tamil Nadu Budget 2019: New Revenue division under Madurai Thirumangalam will be formed in the new financial year.