தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே 5 தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான முன் தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்ட சூழலில், ஜூலை மாத இறுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டபைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் அதிமுக எம்எல்ஏ-க்கள் 4 பேர் திடீரென பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதனால் தமிழ்நாட்டில் மொத்தமாக 5 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அந்த நாளில் இருந்து அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி ஆக வேண்டும். இதனால் 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த தயாரிப்பு பணிகளை முடித்து ஜூன் 22ஆம் தேதிக்குள் அறிக்கையை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அர்ச்சனா பட்நாயக்கிடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தேர்தல் ஆணையத் தகவலின் படி ஜூலை மாத இறுதியில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆகஸ்ட் மாத இறுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications