தமிழினத்தை சாதி மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி! விழிப்பாக இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை : தமிழினத்தை சாதி மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர் எனவும், தமிழினத்தை பிரிக்கும் சதிகளை தெரிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் முக்கிய கடைமையான ரமலான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரம்லான் மாதத்தை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக அரசு
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நோன்பு திறந்து, இஸ்லாமிய மக்களிடையே சிறப்புறை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், " இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு 2007ஆம் ஆண்டு அளித்தது திமுக அரசு. இஸ்லாமிய மக்களுக்காக சிறுபான்மை நல இயக்கம் அமைத்தது திமுக

தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணாவையும், கழக தலைவர் கலைஞர் கருணாநிதியையும் இணைத்தது இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் மீலாது நபி நிகழ்ச்சிதான். சிறுபான்மையினர் உடனான திமுகவின் உறவு காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. 1990 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நலக்குழுவை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி.

திமுகவின் உறவு
மேலும் ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை அவர் அதிகப்படுத்தினார். கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையில் இணைந்தும், பிணைந்தும் இருந்தவர்கள் இஸ்லாமிய தோழர்கள். இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் மாதத்தை மிக புனிதமான மாதமாகவே கடைபிடிக்கின்றனர். நான் ஆற்றுவது எழுச்சி உரை அல்ல, உணர்ச்சி உரை.
|
புனிதமான ரம்ஜான் மாதம்
இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் மாதத்தை மிக புனிதமான மாதமாகவே கடைபிடிக்கின்றனர். நான் ஆற்றுவது எழுச்சி உரை அல்ல, உணர்ச்சி உரை. மதம், சமயம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்துக்குரியவை. தமிழினத்தை சாதி, மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். தமிழினத்தை பிரிக்கும் சதிகளை தெரிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும்" என பேசினார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்லாமிய பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications