'புது ஆண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும்'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
சென்னை: நாடு முழுவதும் 'புத்தாண்டு 2022'-ஐ மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நாட்டின் முக்கிய நகரங்களில் புத்தாண்டு களைகட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கொண்டாட்டம் நடந்து வருகிறது.
Recommended Video
தலைநகர் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
குடியிருப்புகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பரிமாறி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கன்னி மாதா கோவில், சென்னையின் சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்கள், தேவாலயங்ககளில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புத்தாண்டு பிறந்து விட்ட நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ' நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும். பேரிடரைக் கடந்து மக்கள் யாவரும் நலன் பெற்றிடும் ஆண்டாக 2022 அமைய விரும்பி, தமிழ்நாட்டு மக்களுக்கு நமது அரசின் சார்பில் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்' என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
'மலர்ந்தது 2022'.. மக்கள் உற்சாக கொண்டாட்டம்.. கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!