தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது?
விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் வெளியான முக்கிய தகவல் ஒன்று, மாநிலத்தின் நிதி மேலாண்மை எந்த அளவுக்கு சவாலானதாக மாறியுள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
மாநிலத்துக்கு கிடைக்கும் மொத்த வருவாயில் சுமார் 64.4 சதவீத தொகை, வட்டி, ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய மூன்று கட்டாய செலவுகளுக்கே செலவிடப்படுகிறது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகவும் அதிகமான அளவாக கருதப்படுகிறது.

கட்டாய செலவுகள் 64.4% ஆக உயர்வு
நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் 64.4 சதவீதம் அதாவது 100 ரூபாய் வருவாயில் சுமார் 64.4 ரூபாய் கட்டாய செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இதில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கடன்களுக்கான வட்டி ஆகியவை அடங்கும். இந்த 3 செலவுகளையும் தவிர்க்க முடியாது என்பதால் இதை கட்டாய செலவாக அரசு கூறுகிறது.
இந்த விகிதம் இதர மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக உள்ளதாகவும் மரிய வில்சன் தெரிவித்தார். பொதுவாக ஒரு மாநிலம் தனது வருவாயில் கட்டாய செலவுகளுக்கு பெரும் பகுதியை ஒதுக்கும்போது, புதிய திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு போதுமான நிதி கிடைப்பது கடினமாகிறது.
வட்டி செலவு மட்டும் 22.8%
இந்த 64.4 சதவீதத்தில் வட்டி செலவு மட்டும் 22.8 சதவீதமாக உள்ளது. அதாவது, மாநிலத்துக்கு கிடைக்கும் ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயில் 22.80 ரூபாய் வட்டி செலுத்துவதற்கே போய்விடுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதிகப்படியான கடன் சுமை இருக்கும் காரணத்தால் இதற்காக வட்டி செலவும் அதிகரிக்கிறது. கடன் வாங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், அதற்கான வட்டியை தொடர்ந்து செலுத்த வேண்டிய கட்டாயம், அரசின் நிதி நிலையை மேலும் பலவீனப்படுத்துகிறது.
இதன் பொருள் என்ன?
வருவாயில் 64.4 சதவீதம் கட்டாய செலவுகளுக்கே போய்விடுவதால், மீதமுள்ள 35.6 சதவீதம் மட்டுமே பிற செலவுகளுக்கு கிடைக்கிறது. இதில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, சமூக நலத் திட்டங்கள் மற்றும் புதிய முதலீட்டு திட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்த நிலை தொடர்ந்தால், அரசு புதிய திட்டங்களை தொடங்குவதும், இருக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவதும் கடினமாக மாறும்.
மேலும், வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வரும் சூழலில், கட்டாய செலவுகள் இந்த அளவுக்கு உயர்வது மாநிலத்தின் நிதி மேலாண்மைக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதனால் அரசு மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அச்சம் உள்ளது.
இந்த வெள்ளை அறிக்கை, தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து தெளிவான படத்தை வழங்கியுள்ளது. கட்டாய செலவுகளின் அளவை கட்டுப்படுத்துவதும், சொந்த வருவாயை அதிகரிப்பதும் எதிர்காலத்தில் மாநிலத்தின் முக்கிய முன்னுரிமைகளாக இருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
-
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications