தஞ்சை, சென்னையில் கிடுகிடு உயர்வு.. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 228 பேருக்கும். கோவையில் 127 பேருக்கும், திருப்பூரில் 80 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து இப்போது பார்ப்போம்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 11 பேருக்கும், திண்டுக்கல்லில் ஒருவருக்கும், திருச்சியில் 3பேருக்கும், திருவள்ளூரில் 5 பேருக்கும் தேனியில் 2 பேருக்கும், தஞ்சாவூரில் 17 பேருக்கும், சேலத்தில் இருவருக்கும், திருவாரூரில் 4 பேருக்கும், கடலூரில் 3 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications