தமிழ்நாட்டில் நேற்றை விட.. சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
நேற்று 739 பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் இன்று 746 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. தினசரி பாதிப்பில் கோவை 112 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சற்று அதிகரித்த கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 800-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை விட சற்று அதிக பாதிப்பாகும். கொரோனா மொத்த பாதிப்பு 27,23,991 உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்பு அதிகரித்த நிலையில் குறைந்துள்ளது. கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 2 பேர் இறந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை கொரோனாவுக்கு 36,443 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 759 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,79,130 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கோவையில் அதிகம்
8,418 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,03,005 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,29,35,936 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 103 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஈரோடு, சேலம்
கோவை 113 பாதிப்புகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. செங்கல்பட்டில் 59 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 23 பேருக்கும், மதுரையில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 9 பேருக்கும், திருவள்ளூரில் 28 பேருக்கும், திருச்சியில் 22 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 56 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், சேலத்தில் 56 பேருக்கும், நாமக்கல்லில் 45 பேருக்கும், தஞ்சாவூரில் 15 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையிலும், கோவையிலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications