ஜல்லி விலையெல்லாம் ஏறலை.. யாரோ கிளப்பிவிட்டுட்டாங்க! கல்குவாரி உரிமையாளர் வெளியிட்ட அறிக்கை!
சென்னை: தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துவிட்டதாக வெளியான தகவல்கள் கட்டுமானத் துறையினரிடமும், வீடு கட்ட திட்டமிட்டு இருந்த பொதுமக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தகவல்களுக்கு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், பொதுமக்கள் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ஒரு யூனிட் எம்.சாண்ட் 4,000 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாகவும், ஜல்லி 3,300 ரூபாயில் இருந்து 3,800 ரூபாயாகவும், பி.சாண்ட் 5,000 ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டது.
மேலும் டீசல் விலை உயர்வு, குவாரிகளின் எண்ணிக்கை குறைவு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் கட்டுமானப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்ற தகவல்களும் பரவின. இதனால் சிமெண்ட் உள்ளிட்ட பிற கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்து, வீடு கட்டும் செலவு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து கட்டுமானத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. பல இடங்களில் கட்டுமானப் பணிகளை தொடங்க திட்டமிட்டிருந்தவர்கள் கூட விலை நிலவரம் குறித்து விசாரிக்க தொடங்கினர். குறிப்பாக புதிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் கட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த தகவலால் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் விலைகள் கடுமையாக உயர்ந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும், உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தற்போது சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில், கனிமவளப் பொருள்களான Jally, M.Sand மற்றும் P.Sand ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள், கட்டுமானத் துறையினர் மற்றும் வாடிக்கையாளர்கள் யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். .
கீழ்கண்டவாறு அரசு விலை நிர்ணயம் செய்திருந்தது. Jally 5.4,000/-, M.Sand - 5.5,000/-, P.Sand 5.6,000/-, ஆனால் எங்களது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலைக்கும் குறைவாகவே விற்பனை செய்து வருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, கனிமவளப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக வெளியாகும் ஆதாரமற்ற செய்திகள் மற்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.
இதனால் கட்டுமானப் பொருட்களின் விலை தற்போது திடீர் உயர்வு கண்டுவிட்டதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
வீடு கட்டும் ஆசையில் விழுந்த மண்.. சல்லுனு உயர்ந்த ஜல்லி விலை! விண்ணைத் தொட்ட எம்.சாண்ட் - பி.சாண்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு














Click it and Unblock the Notifications