தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை
சென்னை: தமிழகத்தில் கடன் அதிகரிக்க 4 முக்கிய காரணங்கள் என்ன என்பதை நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு அவர் பல்வேறு தரவுகளை வெளியிட்டு வருகிறார்.
அதில் கொரோனா தொற்றுக்கு பிறகு கடன் அதிகரிக்க காரணம் என்ன என்பதை அவர் விளக்கியுள்ளார். அதில் சொந்த வரி வருவாய் குறைந்துள்ளது முதல் காரணமாகவும், வட்டி செலுத்துதல் இரண்டாவது காரணமாகவும், பொறுப்பற்ற செலவினம் மூன்றாவது காரணமாகவும், மூலதன செலவினம் 4ஆவது காரணமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: மொத்தக் கடன் ரூ 5 லட்சம் கோடியிலிருந்து ரூ 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை கொரோனா காலத்தை விட அதிகரித்துள்ளது. தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ 13.18 லட்சம் கோடியாகும். தனி நபர் கடன் ரூ 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது.
அன்றாடச் செலவுகளுக்கே அரசு கடன் வாங்குகிறது. மொத்த வருவாயில் 22.8 சதவீதம் வட்டிக்கே செல்கிறது. சொந்த வரி வருவாய் விகிதம் 5,45 சதவீதம் சரிந்துள்ளது, முத்திரைத் தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட குறைந்துள்ளது. கனிம வளத் துறையில் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூலதன செலவினம் 1.44 சதவீதமாக குறைந்துள்ளது. கட்டாய செலவினம் 64.4 சதவீதமாக உள்ளது.
மின்பகிர்மான கழகம் ரூ 1,07,365 கோடி கடனில் உள்ளது. மாநில போக்குவரத்துக் கழகம் ரூ 43,865 கோடி கடனில் தத்தளிக்கிறது. இருப்பதிலேயே மின்வாரியத்திற்கு தான் அதிக கடன் ஏற்பட்டுள்ளது.
முதியோர் விகிதம் மிக அதிகமாக அதிகரிக்கும் பெரிய மாநிலம் தமிழகம் ஆகும். உழைக்கும் வயதுடைய மக்கள் குறைந்து வருகிறார்கள். வருவாய் பற்றாக்குறை ரூ 78,324 கோடியாகும்.
2025-26 நிதி பற்றாக்குறை ரூ. 1.33 லட்சம் கோடியாக உள்ளது. புதிய நிதி ஆதாரங்களை உருவாக்காமல் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி , இலவச மகளிர் பேருந்து திட்டங்களும் கடன் அதிகரிக்க காரணம்.
தொடர் செலவினம் ரூ.25,000 கோடி வரை உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த போதே நிதி நிலைமை மோசமாக இருந்தது. தற்போது இன்னும் மோசமாக உள்ளது. கூடுதல் வருவாய் ஆதாரம் இல்லாமல் புதிய திட்டங்களை செயல்படுத்தியதும், பொதுத் துறை நிறுவனங்களின் அமைப்பியல் சிக்கல்களை சரி செய்யாததும் கடனுக்கு அதிக காரணம் ஆகும். கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களை விட தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாக உள்ளது.
திமுக ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இணை மாநிலங்களை விட அதிக கடன் சுமையுடன் பிறக்கிறது. 60 ஆண்டில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ 5 லட்சம் கோடி. அதை விட திமுக ஆட்சியில் அதிக கடன் பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் கடன் அளவு 14.3 சதவீதம் ஆகும். தமிழக அரசு ஆண்டுக்கு வட்டி மட்டுமே 67 ஆயிரம் கோடி செலுத்துகிறது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
தமிழகத்தின் தனிநபர் ஒவ்வொருவர் மீதும் ரூ 1,28,934 கடன்! வெள்ளை அறிக்கையில் மரிய வில்சன் தகவல் -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications