தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடன் அதிகரிக்க 4 முக்கிய காரணங்கள் என்ன என்பதை நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு அவர் பல்வேறு தரவுகளை வெளியிட்டு வருகிறார்.

அதில் கொரோனா தொற்றுக்கு பிறகு கடன் அதிகரிக்க காரணம் என்ன என்பதை அவர் விளக்கியுள்ளார். அதில் சொந்த வரி வருவாய் குறைந்துள்ளது முதல் காரணமாகவும், வட்டி செலுத்துதல் இரண்டாவது காரணமாகவும், பொறுப்பற்ற செலவினம் மூன்றாவது காரணமாகவும், மூலதன செலவினம் 4ஆவது காரணமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Debt Growth

அவர் மேலும் கூறியிருப்பதாவது: மொத்தக் கடன் ரூ 5 லட்சம் கோடியிலிருந்து ரூ 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை கொரோனா காலத்தை விட அதிகரித்துள்ளது. தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ 13.18 லட்சம் கோடியாகும். தனி நபர் கடன் ரூ 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது.

அன்றாடச் செலவுகளுக்கே அரசு கடன் வாங்குகிறது. மொத்த வருவாயில் 22.8 சதவீதம் வட்டிக்கே செல்கிறது. சொந்த வரி வருவாய் விகிதம் 5,45 சதவீதம் சரிந்துள்ளது, முத்திரைத் தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட குறைந்துள்ளது. கனிம வளத் துறையில் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூலதன செலவினம் 1.44 சதவீதமாக குறைந்துள்ளது. கட்டாய செலவினம் 64.4 சதவீதமாக உள்ளது.

மின்பகிர்மான கழகம் ரூ 1,07,365 கோடி கடனில் உள்ளது. மாநில போக்குவரத்துக் கழகம் ரூ 43,865 கோடி கடனில் தத்தளிக்கிறது. இருப்பதிலேயே மின்வாரியத்திற்கு தான் அதிக கடன் ஏற்பட்டுள்ளது.

முதியோர் விகிதம் மிக அதிகமாக அதிகரிக்கும் பெரிய மாநிலம் தமிழகம் ஆகும். உழைக்கும் வயதுடைய மக்கள் குறைந்து வருகிறார்கள். வருவாய் பற்றாக்குறை ரூ 78,324 கோடியாகும்.

2025-26 நிதி பற்றாக்குறை ரூ. 1.33 லட்சம் கோடியாக உள்ளது. புதிய நிதி ஆதாரங்களை உருவாக்காமல் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி , இலவச மகளிர் பேருந்து திட்டங்களும் கடன் அதிகரிக்க காரணம்.

தொடர் செலவினம் ரூ.25,000 கோடி வரை உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த போதே நிதி நிலைமை மோசமாக இருந்தது. தற்போது இன்னும் மோசமாக உள்ளது. கூடுதல் வருவாய் ஆதாரம் இல்லாமல் புதிய திட்டங்களை செயல்படுத்தியதும், பொதுத் துறை நிறுவனங்களின் அமைப்பியல் சிக்கல்களை சரி செய்யாததும் கடனுக்கு அதிக காரணம் ஆகும். கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களை விட தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாக உள்ளது.

திமுக ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இணை மாநிலங்களை விட அதிக கடன் சுமையுடன் பிறக்கிறது. 60 ஆண்டில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ 5 லட்சம் கோடி. அதை விட திமுக ஆட்சியில் அதிக கடன் பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் கடன் அளவு 14.3 சதவீதம் ஆகும். தமிழக அரசு ஆண்டுக்கு வட்டி மட்டுமே 67 ஆயிரம் கோடி செலுத்துகிறது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+