ஒரே நேரத்தில் 2,230 காவலர்கள் இடமாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 2,230 காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு எஸ்ஐ-க்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். காவலர்களில் பலரும் விருப்பத்தின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த திமுக, தற்போது 5வது ஆண்டில் அடியெடுத்து பயணித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக காவல்துறையினரின் செயல்பாடுகள் திமுகவுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. அஜித் குமார் லாக் அப் மரணம், திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் ஏடிஜிபி ஜெயராம் சிறுவன் கடத்தலுக்கு உதவியது, விருதுநகரில் போராடிய மக்களை எஸ்பி மிரட்டியது என்று ஒவ்வொரு நாளும் காவல்துறையினரின் செயல்பாடுகள் மக்களிடையே விவாதமாகி வருகிறது. இதன் காரணமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஜூன் கடைசி வாரத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. அதேபோல் நேற்று 5 ஐஜிக்கள் உட்பட 33 எஸ்பி-க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக சிவகங்கை மாவட்ட எஸ்பி-யாக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலில் இருந்த நிலையில், அவர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 2,230 காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு எஸ்ஐ-க்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 2,230 காவலர்களில் பலரும் விருப்பத்தின் பெயரிலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் இடமாற்றம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பேசுபொருளாகி இருக்கிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications