Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வெற்றிப் பள்ளிகள் திட்டம்' அடையாளம் தெரியாமல் மாறும் 500 அரசுப் பள்ளிகள்.. அன்பில் மகேஷ் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளை மேம்படுத்த வெற்றிப் பள்ளிகள் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சுமார் 500 யூனியன்களை தேர்வு செய்து 500 பள்ளிகளை இந்த வெற்றிப் பள்ளிகள் திட்டத்தில் இணைக்க உள்ளதாகவும், இதன் மூலமாக மாடல் பள்ளிகளில் கிடைக்கும் வசதிகள் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாகப் பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழ்நாட்டில் இனி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Education Policy

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாணவர்களின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சியாகும். அதனால் பள்ளிகளை மேம்படுத்த வெற்றிப் பள்ளிகள் திட்டம் விரைவில் தொடங்கப்படும். மாநில கல்விக் கொள்கை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது. மாணவர்களுக்கு அழுத்தம் தரக் கூடாது என்பதற்காக 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் தொடரும். இனி வரும் காலங்களில் 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு திட்டம் அமலுக்கு வந்தது என்று தெரிவித்தார். தொடர்ந்து வெற்றிப் பள்ளிகள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதுதொடர்பாக அன்பில் மகேஷ் பேசுகையில், பயிற்சிப் பார்வை என்ற ஒரு திட்டம் மூலமாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். அதேபோல் டெக்னாலஜியில் ஆசிரியர்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். வெற்றிப் பள்ளிகள் திட்டம் என்பது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாடல் பள்ளிகள் இருக்கிறது.

இதனை அனைத்து குழந்தைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதனால் ஒரு யூனியனுக்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் 500 யூனியனில் உள்ள பள்ளிகளை வெற்றிப் பள்ளிகள் திட்டத்திற்குள் கொண்டு வரப் போகிறோம். இதனை அறிவிப்பாக இல்லாமல், தொடர்ந்து விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறோம். இன்று 900ஆக இருக்கும் கணக்கு, நாளை 9 ஆயிரமாக மாற வேண்டும்.

அதேபோல் மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவுத் திருவிழா என்று கூறினார். இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவுத் திருவிழா நடத்தும் வகையில் மாநில கல்விக் கொள்கையின் தாக்கல் இருக்கும். குழந்தைகள் சக மாணவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து, இலக்கை பெரிதாக்க வேண்டும் என்பதற்காக செயல்படுத்த உள்ளோம்.

இந்த கொள்கை அறிவியல் சார்ந்தது. இதில் பிற்போக்குத்தனங்கள் இருந்துவிடக் கூடாது. அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அதேபோல் ஆசிரியர்கள் புதிய சிந்தனைகளுடன் பாடங்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+